தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் ரசிகர்களை கடந்த 4 நாட்களாக சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இன்று 5வது நாள் இறுதிநாள் என்பதால், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது…
ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வளவு ஒழுக்கமா, இவ்வளவு கட்டுப்பாடா இருந்தது. பழகினதுக்கு நன்றி.
ஒழுக்கம்தான் வாழ்க்கையில முக்கியம். அது இல்லைன்னா முன்னேற முடியாது. அதை தெளிவா கடைப்பிடிச்சீங்க. தொடர்ந்து அதை கடைபிடிங்க.
இங்கே பக்கத்தில் இருந்தவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். காவல்துறையினருக்கும் நன்றி.
எனக்கு தமிழக மக்கள்தான் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். பணம் பேர் புகழ் எல்லாம் தந்துள்ளனர்.
என்னை வாழவைத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க வேண்டாமா?
அதற்கு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்கிறார்கள்.
இங்கு ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் சிஸ்டம் சரியில்லை. ஜனநாயகம் கெட்டுப் போய்விட்டது.
அரசியல் குறித்த மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்.
எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மக்களின் சிந்தனையை மாற்ற வேண்டும்.
எல்லாரும் இணைந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்“ என்று ரஜினிகாந்த் பேசினார்.
இதுபோன்று தன் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.