தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களை முடித்துவிட்டு இமயமலைக்கு செல்வது ரஜினியின் வழக்கம்.
அங்கு அவர் எளிமையான மனிதரைப் போல மக்களோடு மக்களாக கலந்துக் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்புவார்.
அங்குள்ள சாமியார்களை சந்திப்பதும், வழிபாட்டு தலங்களுக்கு செல்வதும் அவருக்கு பிடித்தமான ஒன்று.
தற்போது ரஞ்சித் இயக்கும் காலா பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.
எனவே இந்தாண்டும் இமயமலை செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
அங்கு சென்று வந்தபின் தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையில் தமிழக மக்களின் மனநிலை எப்படி உள்ளது? தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவு இருக்குமா?
வாக்கு சதவிகிதம் எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற விவரங்களை சேகரிக்க உத்தரவு இட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.