சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த தைரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் நன்றி விழாவில் அழுதார்.

எனவே, இவருக்கு சிம்பு, விஷால் மற்றும் மனோபாலா பலரும் ஆறுதலாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், சிவகார்த்திகேயனை தொடர்பு பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, இதுவரை நடந்தவைகளை கேட்டறிந்த ரஜினி, தைரியமாக இருக்க சொல்லி, ஆறுதலாக பேசினாராம்.

சில்ட்ரன்ஸ், பேமிலி ஆடியன்சுக்கு உங்கள பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன? சந்தோஷமா இருங்க.

பேமிலி, ப்ரெண்ஸ் கூட எங்கேயாவது போய் வா. மனநிம்மதி கிடைக்கும் என்றும் சிவாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

சந்தானம்-ரோபா சங்கர் கூட்டணியில் காமெடி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து வருகிறார் சந்தானம்.

இந்நிலையில் சற்றுமுன் சந்தானத்தின் அடுத்த பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

விடிவி கணேஷ், தன் விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.

சேதுராமன் இயக்கவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இதில் முக்கிய வேடத்தில் ரோபா சங்கர் நடிக்கவிருக்கிறாராம்.

சந்தானம் மற்றும் ரோபா சங்கர் இருவரும் காமெடியில் சிறந்தவர்கள்.

எனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாய் அமைவதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-அஜித் ஒதுங்கினாலும், ரசிகர்களுக்காக நின்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சூட்டிங்கை தமிழ்நாட்டில் வைக்க மாட்டார்கள்.

சூட்டிங் நடப்பது அறிந்துவிட்டால், திரளும் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்பதால், பெரும்பாலும் தமிழ்நாட்டில் சூட்டிங் வைப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

அண்மையில் விஜய்யின் பைரவா படத்திற்காக, தமிழக பின்னணியை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படம் பிடித்தனர்.

அதன்பின்னர் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை ஷூட் செய்தனர்.

அதுபோல் அஜித்தின் 57வது படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையின் முக்கியமான வீதிகளில் படமாக்க நினைத்தாராம் சிவா.

ஆனால் அஜித் மறுக்கவே, பின்னர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

ஆனால், ரஜினியின் 2.ஓ சூட்டிங்கை சென்னையை அடுத்துள்ள திருக்கழுங்குன்றம் பகுதியில் நடத்தியுள்ளார் ஷங்கர்.

அங்கே ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம் வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி பாதுகாப்பாகவும், சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இருந்தபோதிலும் தன் ரசிகர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் இந்த சூப்பர் ஸ்டார்.

விஜய்சேதுபதி ரூட்டுக்கு வந்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க ஆகிய படங்கள் அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இவரது வழியில் ஜி.வி. பிரகாஷீம் தனது இரண்டு படங்களை ஒரே மாதத்தில் வெளியிடவிருக்கிறார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ தீபாவளிக்கு (அக்டோபர் இறுதி) ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பிராசந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ படத்தையும் நவம்பரில் வெளியிட இருக்கிறார்களாம்.

செல்வராகவன்-சூர்யா கூட்டணியில் இணைந்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்தால் இந்த எதிர்பார்ப்பு உச்சம் தொடும்.

தற்போது அது போன்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நெஞ்சம் மறப்பதில்லை கௌதம் மேனன் தயாரித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, யுவன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ் பாடியிருக்கிறார்.

கிட்டதட்ட 10 வருடங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெமோ-றெக்க-தேவி படங்கள்; 1 வாரம் – மொத்த வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விருந்தாக, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய்சேதுபதி நடித்த றெக்க மற்றும் பிரபுதேவா நடித்த தேவி ஆகிய 3 படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த 3 படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இவை மூன்றும் ஓரளவு பாசிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

தற்போது 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இவை மூன்றின் வசூல் நிலவரங்கள் தெரியவந்துள்ளது.

ரெமோ படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.31.8 கோடியை வசூல் செய்துள்ளது.

அதாவது சென்னையில் ரூ. 3.35 கோடியும், செங்கல்பட்டில் ரூ. 8.4 கோடியும், கோவையில் ரூ5.5 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

இந்த ஆறு நாட்களில், விஜய்சேதுபதியின் ‘றெக்க’ ரூ.9 கோடியும், பிரபுதேவாவின் ‘தேவி’ ரூ.8 கோடியும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows