தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று 100வது நாளில் கலவரமாகி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
போலீஸின் இந்த வன்முறையை கண்டிக்கும் வகையில் ரஜினிகாந்த் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்…
காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம், உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது..
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்…” என பேசியுள்ளார்.