தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா நோயாளிகளை காப்பாற்ற அவர்களை முற்றிலும் குணமாக்க உலக மருத்துவர்களே போராடி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலால், இந்த நோயை எதிர்த்து கொரோனா களத்தில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கியவர் சித்த மருத்துவர் வீரபாபு.
சென்னை, சாலிகிராமத்திலுள்ள, ஜவஹர் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி சிறப்பு மையத்தையும் அமைத்துள்ளது.
இங்கு, டாக்டர் வீரபாபு குழுவினர், ஆவி பிடித்தல், சூரிய குளியல், மூலிகை தேநீர், உள்ளிட்ட சித்தா உணவுகளை வழங்கி, இயற்கை சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சிகிச்சை முடிந்து 550 பேர், நலமுடன் வீடு திரும்ப 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே வாரத்தில் 69 கொரோனா நோயாளிகளுக்கு நெகட்டிவ் முடிவை கொண்டு வந்தார் வீரபாபு.
இவரின் செயல்பாடுகள் பற்றி கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
ரஜினி பேச்சில்…
கொரோனா நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க. ரொம்ப நல்லாவும் பண்றீங்க.
டெஃபனெட்டா மீட் பண்ணணும். கொரோனா லாக் டவுன் முடியட்டும். மீட் பண்ணலாம்’ என்று பாராட்டி இருக்கிறார்.
வீரபாபு தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.
சென்னை மணப்பாக்கத்தில் உழைப்பாளி என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கினார். வெறும் 10 ரூபாய்க்கு உணவு வழங்கியும் வரும் இவர் சாலிகிராமத்தில் இரண்டாவது கிளையை தொடங்கி உள்ளார்.
என்னுடைய இன்ஸ்பிரேஷனே ரஜினிதான். அவரின் படங்களைப் பார்த்து ரசிகனாக மாறியவன் அல்ல நான்.
சாதாரண நிலையிலிருந்து உழைத்து முன்னேறியவர்.
இந்திய பிரதமரே அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கும் வகையில் தன் தகுதியை உயர்த்திக்கொண்டவர்.
அதான் அவர் நடித்த உழைப்பாளியை என் உணவகத்தின் பெயராக வைத்தேன்.” என பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.