ஆன்மிக அரசியல் அப்டேட்ஸ்: உளவுத்துறைக்கே ரஜினி கொடுத்த ஷாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ஆன்மிக அரசியல் பணிகளை ஆரம்பித்துவிட்டார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் தன் காவலர்களை நியமித்து வருகிறார்.

மேலும் ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்படத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாம்.

இதனால் தன் ஆலோசனை இடத்தை மாற்ற முடிவு செய்த சூப்பர் ஸ்டார் ஏதாவது ஒரு காரில் சம்பந்தப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு, காரிலேயே ஆலோசனையை முடித்து விடுகிறாராம்.

மேலும் இதற்காக அவர் பல கார்களை பயன்படுத்துகிறாராம். ஒரே காரில் பயணிக்காமல் சிறிது நேரம் ஒரு காரிலும் அதன் பின்னர் மற்றொரு காரிலும் பயணிக்கிறாராம்.

இவரின் இந்த செயல் உளவுத்துறைக்கே பெரும் ஷாக்காக அமைந்துள்ளதாம்.

Rajinikanth political entry news updates

நட்பு வேற; அரசியல் வேற; ரஜினியுடன் கூட்டணி பற்றி கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி கமல் தன் கட்சி மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் தனது படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு கமல் பதிலளித்தார்.

அவற்றில் சில…

நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
ஆனால் நட்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு.

ரஜினியின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். அது காவிக்கான அரசியலாக இருக்காது என நம்புகிறேன்.

தமிழகத்தில் நிதி நிர்வாகம் சரியில்லை. எந்த காரணத்துக்காகவும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. ஓட்டுக்கு சில ஆயிரம் பணம் வாங்கினால் பல லட்சங்களை இழக்க நேரிடும்.

மேலும் அவர் தொடர்ந்து அங்கு பேசியதாவது…

2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன்.
நான் தேர்ந்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.

பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார், காந்தி எனது ஹீரோக்கள்.

நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன்.” இவ்வாறு கமல் பேசினார்.

Friendship differ from Politics says Kamal about Rajini

நாளை நமதே என்ற பெயரில் கமலின் புதிய இணையதளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர் என பலர் அறிந்த போதிலும் அரசியல்வாதி என கையெழுத்திட்டு தன் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தியவர் கமல்ஹாசன்.

வருகிற பிப்ரவரி 27ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

அவரது கட்சியின் பெயர், கொடி மற்றும் நிர்வாகிகள் விபரத்தை அன்றே அறிவிக்க உள்ளார்.

தனது அரசியல் பணிக்காக ‘மய்யம்’ என்ற பெயரில் மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கியிருந்தார்.

தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்த இணையதளம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.

இணைவதற்க்கு
//naalainamadhe.maiam.com/ என அந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்வலர்கள் இணைந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தங்களது பெயர், செல்போன் எண், மெயில் ஐடி, மாவட்டம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யலாம்.

முக்கியமாக, எந்தவகையில், எந்த துறையில் தங்களால் சமூக பணி செய்ய முடியுமென்பதை பதிவு செய்வோர் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kamal launched naalainamadhe website for his political party

தடைகளை உடைத்து பிப்ரவரி 16ல் வருகிறார் மேல்நாட்டு மருமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் பிரபலமான ராஜ்கமல் அண்மைக்காலமாக சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் பிப்ரவரி 16 ம் தேதி வெளியாகிறது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ராஜ்கமல் பேசியதாவது…

இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்..

தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்..

குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS அவர்களுக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..

ஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது.

அந்த இடைவேளையில் மேல்நாட்டு மருமகன் படத்தின் போட்டோஸ் பார்த்து “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது..

மிகுந்த போராட்டத்திற்க்குப் பிறகு வரும் பிப்ரவரி 16, மேல்நாட்டு மருமகன் படம் திரைக்கு வருகிறது.

இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Rajkamal starrer Melnaattu Marumagan movie release on 16th Feb 2018

பேட்மேன் எபெக்ட்; சத்யம் தியேட்டரில் பெண்களுக்கு ப்ரீ நாப்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் அவஸ்தை நம்மில் பலருக்கும் அறிந்திருக்கும்.

அந்த சமயத்தின் போது அவர்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கண்டுபிடித்தவர் தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த மனிதரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஹிந்தி திரைப்படம்தான் ‘பேட் மேன்’.
இதில் அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்க்க, பிரபல இயக்குனர் ஆர்.பால்கி இயக்கியுள்ளார்.

இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், எஸ்பிஐ சினிமாஸ், தங்களுடைய சத்யம் திரையரங்கில், இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரத்தை பொருத்தியுள்ளது.

விரைவில் தங்களுடைய அனைத்து திரையரங்குகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் திரையரங்கத்திற்கு வரும் பெண்களுக்கு திடீரென ஏற்படும் அசௌகரியத்தை உணராமல் இருக்க இத்தகைய வசதியை அவர்கள் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyam Cinemas decided to provide free Sanitary Napkins to ladies

நடிப்பு கிடையாது ஒன்லி படிப்புதான்; தன் மகள் குறித்து ரேகா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், அண்ணாமலை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரேகா.

இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து “கேணி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக செய்திகள் பரவின.

இதனை மறுத்து நடிகை ரேகா விளக்கமளித்திருக்கிறார். அவர் கூறியதாவது…

“மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன்.

அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என கூறியுள்ளார்.

Actress Rekha statement about his daughter entry in Cinema

More Articles
Follows