தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த எழுத்தாளர் ஞாநி, இன்று அதிகாலை மரணமடைந்தார்.
அவருக்கு வயது 64. செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர், சங்கரன். எழுத்தாளர், நாடக்ல்ப கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றியுள்ளார்.
அவர், சமகால அரசியல்குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார்.
இந்த நிலையில், உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல், பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல், மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்படுகிறது.
ஞாநியின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ’ஞாநி என்னுடைய நண்பர், நான் அவரது ரசிகர். தனக்குச் சரியெனத் தோன்றியதைப் பயமின்றி பேசக்கூடியவர், எழுதக்கூடியவர் ஞாநி. அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது’ என்றார்.
Rajinikanth pays tribute to his friend and strong critic Gnani Sankaran