தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின்போது சில அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினி தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார்.
பின்னர் ரஜினிகாந்த் கூறியதாவது:-
கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.
அவர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே.
ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
சிஏஏ விவகாரத்தில் பிரதமர் உடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறினேன்.
என்னால் முடிந்தவரை உதவி செய்வதாகவும் கூறினேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.