தன் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்பு செயலியை வெளியிடும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நமது உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு Peace for children அறக்கட்டளையும் அதன் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (TOLL FREE NUMBER) குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு செயலியையும் (APP) வெளியிடுகிறோம்.

இந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”

வெங்கட் பிரபு தரும் *பார்ட்டி*யில் எல்லோரும் கலந்துக்கலாம்; என்ஜாய் பண்ணலாம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிச்சயமாக, வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும் சரி, அது ஒரு பார்ட்டி உணர்வை வழங்கும். தற்போது அவருடைய படத்தின் பெயரே ‘பார்ட்டி’ என்பதால் அது மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, “வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தை தருவது தான். நிச்சயமாக, பார்ட்டி படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சிபிஎஃப்சி உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது.

படத்தின் கதையை பற்றி தயாரிப்பாளர் டி சிவா கூறும்போது, “கதையை பற்றிய எதையும் இப்போது வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின் போது கதை நடக்கிறது. அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்‌ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்” என்றார்.

பார்ட்டி படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். பிரவீன் KLன் சிறப்பான எடிட்டிங் படத்தை சரியான வேகத்தில் கொண்டு செல்லும்.

200 பேர் உழைப்பில் 2 கோடி செலவில் உருவாகும் எமலோகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படம். தற்போது, இப்படத்திற்காக AVM ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது.
சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.

மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள்.

வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், ‘போஸ்’ வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்குநர் – பாலசந்தர், பாடல்கள் – யுகபாரதி, இசை – ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு – P. ரங்கநாதன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா செந்தில். இயக்கம் – முத்துகுமரன்.

ஹன்சிகாவுக்கு 50. ஜிப்ரானுக்கு 25. இருவரும் இணையும் மஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள `துப்பாக்கி முனை’ படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனையடுத்து `மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யு.ஆர்.ஜமீல் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அந்த போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் தம் அடிப்பது போல ஹன்சிகா போட்டோ இடம் பெற்றுள்ளது.

மற்றொரு போஸ்டரில் ஹன்சிகா கையில் பல்வேறு முகமூடிகளை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பது குறித்து ஜிப்ரான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

இது நான் இசையமைக்கும் 25-வது படம் என்றும், ஹன்சிகாவுக்கு 50-வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2 வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ்..: தாங்குமா தமிழ் சினிமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை முறைப்படுத்த விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து அவர்கள் சொல்லும் தேதிகளில் படத்தை வெளியிட சொல்கின்றனர்.

ஆனால் இடையில் ஏற்பட்ட (தனுஷ், விஜய்சேதுபதி படங்கள்) சில பிரச்சினைகளால், வருகிற கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் தினத்தில் எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்துக் கொள்ளுங்கள் என கூறி சங்கம் விலகி விட்டது.

இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன.

வருகிற 14-ந் தேதி பிரசாந்தின் ஜானி, விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, மோகன்லால் நடித்துள்ள மலையாள படம் ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வரவுள்ளது.

இதனையடுத்து அடுத்த வாரம் 20-ந் தேதி விஜய்சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுஷின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, விஷால் வெளியிடும் கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.

ஆக மொத்தம் 10 நாட்கள் இடைவெளியில் கிட்டதட்ட 20 படங்கள் திரைக்கு வருகிறது.

இதனால் தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இவர்கள் இத்தனை படங்களை ரிலீஸ் செய்தால் எல்லா படத்தையும் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள்? என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்தான்.

ஐஸ்வர்யா தத்தாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே பேவரைட் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவரது அண்மை பேட்டியில் சிம்புவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது…

என்னுடைய ஆல் டைம் பேவரைட் எப்பவும் சிம்புதான். சினிமா வர்றதுக்கு முன்னாடியே எனக்கு சிம்புவைப் பிடிக்கும்.

ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு ஆசையிருக்கு.

இது வரைக்கும் அவர்கிட்ட இதைச் சொன்னது இல்லை.

பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் ஆசையிருக்கு. அது சீக்கிரமே நிறைவேறும்’ என கூறினார்.

More Articles
Follows