ரஜினிக்கு இரு வேடம் கொடுத்து அழகு பார்க்கும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதன் பின்னர் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்பட சூட்டிங் அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் போலீஸ் அதிகாரி, சமூக சீர்திருத்த போராளி என இரண்டு வேடங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth going to play dual role in Thalaivar 166

விஜய்யுடன் கை கோர்க்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் கபீஸ் பூவையார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரது நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை தற்போது அட்லி படமாக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பிரபலமான கபீஸ் பூவையார் என்ற சிறுவனும் இப்படத்தில் நடிக்கிறாராம்.

அத்துடன் ரஹ்மான் இசையில் ஒரு பாடலையும் கபீஸ் பாடவுள்ளதாக கூறப்படுகிறது.

Super Singer fame Kabish Poovaiyar team up with Vijay in Thalapathy 63

ஆர்கே. சுரேஷின் ‘அமீரா’ படத்தில் முக்கிய கேரக்டரில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகர் ஆர். கே. சுரேஷ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஆர் சுப்ரமணியம் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க நாயகியாக அனுசித்தாரா நடிக்கிறார்.

இவர் அண்மையில் வெளியான ‘பொதுநலன் கருதி’ படத்தில் நடித்தவர்.

இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இப்பட பூஜை நாளை பிப்ரவரி 22ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறவுள்ளது.

Seeman and RK Suresh team up for Ameera movie

சுஜித்துடன் என் மனைவி அதிதிக்கு நிச்சயதார்த்தம்.. ; அழுது புலம்பும் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல் பட்டதாரி படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும் அதிதிக்கும் பிரச்சனையானது.. அதைத்தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஆனால் இதுபற்றி தற்போது என் மீது அளித்துள்ள புகாரில் அதிதி மேனன் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனக் கூறியதால் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு அழைத்துச்சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி எனது வீட்டிலேயே பாதுகாப்பு அளித்தேன்.. . அப்போது நான் அவரை அப்பவே அக்கறையுடன் கவனித்துக் கொள்வதாக எனது பெற்றோரிடம் அதிதி மேனன் கூறி, திருமணத்திற்கு சம்மதம் கேட்க, எனது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அப்போது அதிதியின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும் வாழ்த்தும் பெற்று 2016 ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.. அதன்பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அந்த வீட்டின் ஒப்பந்தப் பாத்திரம் ஆதிரா சந்தோஷ் கணவர் பெயர் சரவண குமார் என்றே போடப்பட்டிருக்கும். கடந்த மூன்று வருடங்களில் கேரளாவில் உள்ள அதிதி வீட்டிற்கு 10-க்கும் மேலான தடவை சென்று அவரது பெற்றோருடன் தங்கி இருந்து வந்துள்ளோம்.

கடந்த நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், நாங்கள் தங்கிருந்த வீட்டை எனக்கே தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்கள், கார், பைக் மற்றும் பீரோவில் இருந்த நகை, பணம், எனது 2 செல் போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அதை விசாரித்த போது அவர் சுஜித் என்ற நபருடன் தவறான உறவில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது. சுஜித்தை நேரில் அழைத்து விசாரித்த போது அவர்களுக்கிடையேயான கள்ள காதலை ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் அதிதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, எனது சொந்த பிரச்சனையால் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்பதால் நான் படப்பிடிப்பிற்கு சென்று விட்டேன். அதன் பின்னரும் 40 நாட்களுக்கும் மேலாக சமாதானம் பேச முயற்சித்து தோல்வியுற்றதால் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் எங்களை சேர்த்து வைக்கும்படி வழக்கு தொடர்ந்தேன்.

மூன்று வாரங்களுக்கு மும்பு அதிதி அவரது ஆண் நண்பர் சுஜித்துடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்ததை அடுத்து அவருடன் சமாதானம் பேச சென்றேன். அப்போது நான் அதிதியுடன் பேச முயன்ற போது என்னை பேசவிடாமல் தடுத்து தாக்கியதால் நான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

இவை அனைத்தும் நடந்து கொண்டு இருக்கும் போதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்.

நேற்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு கொடுத்து, எனது திருமணம் சட்டப்படி செல்லும் என்பதையும் தமிழக அரசு பதிவுத்துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் என்றும் சார்பதிவாளர் மூலம் பெற்ற ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.எங்கள் திருமணம் லீகலா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது..

ஆனால் சமூகம் சம்பந்தமான எனது பணிகளை கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் விவசாய போராட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைத்த நிதியை முறைகேடாக எனது சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்..

மதுரையில் நான் வாங்கிய வீடு என்னுடைய தந்தையின் ஓய்வூதிய பணத்தை முன் தொகையாக செலுத்தி வாங்கப்பட்ட வீடு.. அந்த வீட்டின் மதிப்பு மொத்தம் 27 லட்சம் ரூபாய்.. அதற்கு 20 லட்சம் ரூபாய் வங்கியில் கடனாக பெற்றுள்ளோம்.. அந்த வங்கிக்கடன் கூட எனது தந்தையின் வயது காரணமாக அவருக்கு கிடைக்கவில்லை என்பதால் என் பெயரிலும் என் அக்கா பெயரிலும் சேர்த்து வங்கிக்கடன் பெற்றோம். முன் தொகைக்காக என் தந்தையின் ஓய்வூதியப் பணமும், நாங்கள் ஏற்கனவே குடி இருந்த வீட்டின் அட்வான்ஸ் தொகை ஐந்து லட்சமுமாக சேர்த்து மொத்தம் அந்த 7 லட்சத்தை தயார் செய்தோம்.

என்னுடைய தந்தை அவருடைய பல வருட உழைப்பில் கிடைத்த ஓய்வு ஊதியத் தொகையை கொண்டு தனக்கென சொந்தமாக இப்போதுதான் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். ஆனால் அந்த வீட்டையும் இப்படி முறைகேடாக சம்பாதித்த பணத்தில் நான் வாங்கி இருக்கிறேன் என்று கூறி அவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.

நான் ஜல்லிக்கட்டு மற்றும் விவசாய போராட்டங்களில் முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் நான்கு கார்களை வாங்கி உள்ளேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் அதிதி. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. நான் ஓலா நிறுவனத்துடன் இணைந்து டிராவல்ஸ் பிசினஸ் தொடங்குவதற்காக என்னுடைய நண்பர்களிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளேன்.. அவர்கள் எனது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியதற்குண்டான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான்கு கார்களுக்கும் சேர்த்து தனித்தனியாக வங்கிக்கடன் பெறுவதற்காக நான் செலுத்திய மொத்த முன்தொகை சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்தான். இதில்கூட மீதி ஒரு லட்சம் ரூபாயை எனது தந்தை, வீட்டிலிருந்த நகையை அடமானம் வைத்துதான் எனக்கு கொடுத்துள்ளார். அவர் நகை அடமானம் வைத்ததற்கான ஆதாரமும் அந்தப்பணத்தை எனக்கு வங்கி கணக்கு மூலம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் இந்த சமூகத்தின் மீதான ஆர்வத்தில், எனது சொந்த விருப்பத்தின் பேரில் ஜல்லிக்கட்டு, விவசாய புரட்சி போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்காக தோள் கொடுத்ததை அதிதி கொச்சைப்படுத்தி உள்ளார். 2017ல் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் விவசாய போராட்டத்திலும் கலந்து கொண்டதில் நான் முறைகேடு செய்திருந்தால் கடந்த இரண்டு வருடமாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது திடீரென அது பற்றி புகார் செய்வது ஏன்?.. அப்போதே அவற்றை தெரியப்படுத்தி இருக்கலாமே..?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்த காலம் என்று ஒன்று இருக்கும்.. அவரும் கடந்த காலத்தில் ஒரு பையனை காதலித்து கொச்சியில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.. கேரளாவில் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்த நிலையில் அவரை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார் அதிதி. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது.

தற்போது சுஜித் என்பவருடன் தொடர்பில் உள்ளார் என்கிற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி அவர் அளித்த புகாரில் எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.. மேலும் அந்த சுஜித்துடன் அதிதி மேனனுக்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் அவர்களின் குடும்பத்தார் ஈடுபட்டுள்ள தகவலும் எனக்கு தெரியவந்தது.. அந்தப் பையன் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. இளமுருகு எனும் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன்..

இந்த தகவல்களை எல்லாம் புகாராக கொடுத்து என் மனைவியை நான் அசிங்கப்படுத்த விரும்பாமல் சட்டபூர்வமாகவே அணுக நினைத்தேன்.. எனக்கும் அதிதி மேனனுக்கு திருமணம் நடக்கவில்லை என அவர் சொல்கிறார். ஆனால் திருமணம் நடந்ததை நான் சட்டபூர்வமாக நிரூபிப்பேன். அவருடன் நான் குடும்பம் நடத்தியதற்கு பல சாட்சிகள் இருக்கின்றனர்..

அவரது ஈமெயிலை ஹேக் செய்து அவருடைய சான்றிதழ்களை திருடி விட்டதாக இன்னொரு ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். எங்களது திருமணம் நடைபெற்றபோது, பதிவாளர் முன்பு அவர் கையெழுத்திட்டது உட்பட அனைத்துமே சாட்சிகளாக ஆதாரங்களாக இருக்கின்றது.. என்னை திருமணம் செய்யவில்லை என்றால் எப்படி என்னுடன் மூன்று வருடம் சேர்ந்து வாழ முடியும்..? என்னுடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்கான ஒப்பந்த பத்திரமே அபி சரவணனின் மனைவி என அவர் பெயரில் தானே போடப்பட்டிருக்கிறது.

அவர் தனது கள்ளக்காதல் விவகாரத்தை திசைதிருப்புவதற்காக என் மீது எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுநாள்வரை நான் அவர் மீது எந்த தனிப்பட்ட புகாரும் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி அவரிடம் கேட்க போனபோது அவருடன் இருந்த அவரது ஆண் நண்பர்கள் என்னை தாக்க முயற்சி செய்தார்கள் என்பதால்தான் அவர்கள் மீது, நான் காவல்துறையில் புகார் அளித்து உள்ளேன். 3 ஆண் நண்பர்களுடன் தங்கி இருந்த அதிதி மேனன் எதற்காக என்னிடம் சமாதானம் பேச அவரது நண்பர் ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்..? அதுவும் இரவு 12 மணிக்கு..!

மேலும் திருவனந்தபுரம் எல்லைக்குள் வரக்கூடாது என என்னை காவலர்கள் எச்சரித்து அனுப்பியதாக ஒரு குற்றசாட்டு சொல்லி இருந்தார்.. ஆனால் நான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் தான் காவல்துறை அனுமதியுடன் நடந்தது.”

என தனது தரப்பு நியாயங்களை முன் வைக்கிறார் அபி சரவணன்.

மாடர்ன் கேரக்டரும் கொடுங்கப்பா ; வசுந்தராவை கெஞ்ச வைத்த கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.

எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர்.

தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.

தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா.

‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.

இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.

அந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் சீனு சாருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார். அவர் உருவாக்கிய கேரக்டர் இதுவரை தப்பாகி இருக்கிறதா என்ன..? இதிலும் அப்படி ஒரு அருமையான கேரக்டர்.

உதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.

சின்ன வயதில் டிவியில் பார்த்த வடிவுக்கரசி அம்மாவுடன் நடிக்கும்போது என்னுடைய பாட்டியைப் பார்ப்பது போலவே இருந்தது.

இத்தனை வருஷங்களில் சீனு ராமசாமியின் வயசு மட்டும் மாறியிருக்கே தவிர, அவர் அப்படியே தான் இருக்கிறார். மாறவே இல்லை. முன்னெல்லாம் சில காட்சிகளை படமாக்கும்போது கொஞ்சம் யோசிச்சு பண்ணுவார்..

ஆனா இப்ப ஸ்பாட்டுக்கு வர்றப்பவே இதுதான் எடுக்கணும்னு தீர்மானிச்சு முன்னைவிட ரொம்பவே தன்னம்பிக்கையா படம் பண்றார். நான் நடித்த படத்தோட டைரக்டர் தேசிய விருது வாங்கிட்டார்னு சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்.

இந்தப்படத்துல தேங்காய் மண்டிக்கு சொந்தக்காரி அப்படிங்கிறதால கொப்பரை தேங்காய் உடைச்சு உடைச்சு கையில எல்லாம் சரியான காயம்..

முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுல கொண்டுபோய் விட்டுட்டு மறுநாள் காலையிலேயே எந்த பயிற்சியும் இல்லாம தேங்காய் உடைக்க விட்டுட்டாங்க…

இதுதவிர ‘வாழ்க விவசாயி’ங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன்.. இதுவும் கிராமத்து கேரக்டர் தான். ராஜபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற புது இயக்குநர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஒரு பக்கம் உணவுப்பொருள் விலை ஏறுது.. ஆனா இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை ஏன் அதிகரிக்கிறது என்கிற விஷயத்தை இந்தப்படம் அலசுகிறது. ஷூட்டிங் சமயத்துல கிராமத்து மக்கள் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க.

விவசாய நிலத்துல காவல் காக்குற பரண்மீது ஒரு பாடல் காட்சி எடுக்கும்போது, அதுல விரிசல் ஏற்பட்டு 12 அடி உயரத்துல இருந்து அப்புக்குட்டி கீழே விழ, அவர் மேல நாங்க எல்லாம் விழுந்தோம்.. ஆனா யாருக்கும் அடியெல்லாம் எதுவும் படலை.

அடுத்ததாக விக்ராந்துடன் ‘பக்ரீத்’ என்கிற படத்தில் தற்போது நடிக்கிறேன்..

ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதுக்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள்.. இதிலேயும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். இதில் அவ்வளவாக மேக்கப் போடாமலே நடித்துள்ளேன்.

விரைவில் வெளிவர இருக்கும் பக்ஷி, சிகை படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்தப்படத்தை இயக்குகிறார். காக்கா முட்டை படத்தில் பணியாற்றியவர்.. அவரது பக்ஷி படம் பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டுத்தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பெரிய பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிச்சிருந்தும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் ஏன் இவ்வளவு இடைவெளி என கேட்கிறார்கள்..

என்னைக் கேட்டால் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன்.

சீனு சார் கூட என்கிட்டே சொல்லும்போது, உனக்கு திருப்தி தருகிற மாதிரியான, பல வருஷம் கழித்து பார்த்தாலும் நீ நினைத்து பெருமைப்படும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடி என சொல்வார்.

ஆனால் பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள்… அப்படியே கிராமத்து பெண் கேரக்டரா இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை.

தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்ல நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க..

அதேசமயம் இப்படி விலகியே போய்க்கிட்டு இருந்தா ரசிகர்கள் நம்மை மறந்துருவாங்க.. ஆரம்பத்துல அப்படி தோணலை. ஆனா இப்ப அது உண்மைன்னு தெரியுது. அதனால இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதுக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.

இப்போ தமிழ் சினிமாவோட கலரே மாறிட்டு வருதே… இங்கிலீஷ் பட இண்டஸ்ட்ரி மாதிரி ஆகிட்டு வருது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட லிஸ்டில் சேர்ந்துவிட்டது.

மிக மிக அவசரம், டு லெட் எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம்தானே,, புதிய இயக்குநர்கள் நல்ல கதைகளோடு வந்தால் பணம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்..

எப்போதும்போல அதே நான்ஸ்டாப் ஸ்பீடில் அவருக்கே உரிய தனித்துவமான வெண்கல குரலில் கலகலப்பாக பேட்டியை முடிக்கிறார் வசுந்தரா.

Actress Vasundhara talks about her upcoming movies

அபி சரவணன் இப்படி செய்தாரா? அதிதி மேனன் போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன்.

இவர் சமூக சேவைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். விவசாயிகளின் போராட்டத்தின் போது டெல்லி வரை சென்று அவர்களுக்கு உதவினார்.

இவர் 2016-ம் ஆண்டு பட்டதாரி படத்தில் நடித்த போது அதிதி மேனன் உடன் காதல் கொண்டார்.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபி சரவணனை நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.

தற்போது நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன்…

“பட்டதாரி படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார் அபி சரவணன். நான் அவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், ஏமாற்றிவிட்டதாகவும், என்னைப் பற்றி தவறான செய்திகள் வந்தன.

அடுத்ததாக இன்னொரு நபருடன் ஓடிவிட்டதாகவும், அவருடன் இணைந்து வாழ்ந்ததாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன.

2016-ம் ஆண்டு முதல் அபி சரவணன் மீது அன்பான உறவு இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் சமூகசேவை செய்வதாக பணம் பெற்று பிரச்னைகள் உருவாகின.

இதில் என்னையும் மாட்டிவிடுவார் என்ற சூழ்நிலை வந்தது. இதுபற்றி பேசியபோது எங்களிடையே வாக்குவாதம் உண்டானது.

மேலும் ஒரு கதாநாயகியுடன் அவருக்கு 3 வருடம் உறவு இருந்தது. இதனால் வாக்குவாதம் ஏற்படவே பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்றொரு புறம் அதிதிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட, அது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Living together issue between Abi Saravanan and Aditi Menon

More Articles
Follows