கமல் போஸ்டர் மீது சாணி அடித்த ரஜினி ரசிகர் கமலுக்கு வில்லனா? லோகேஷ் மீது கடுப்பில் ரசிகர்கள்

கமல் போஸ்டர் மீது சாணி அடித்த ரஜினி ரசிகர் கமலுக்கு வில்லனா? லோகேஷ் மீது கடுப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

2020 நவம்பர் 7ல் கமலின் பிறந்தநாள் அன்று டைட்டில் டீஸரை வெளியிட்டனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபுதேவா நடிப்பார் என தகவல் வெளியானது.

பின்னர் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான லாரன்ஸ் தான் கமலுக்கு வில்லன் என சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவல் உறுதியாகவில்லை.

இந்த தகவல் ஒருவேளை உறுதியாகிவிடுமோ என கமல் ரசிகர்கள் டென்சனில் உள்ளனர்.

அதற்கான காரணம்… *தர்பார் இசை விழாவில் கலந்து கொண்டார் லாரன்ஸ். அவர் பேசும் போது… தான் சின்ன வயதில் தீவிர ரஜினி ரசிகன் என்றும், கமல் பட போஸ்டரில் சாணி அடித்ததாக பேசினார்.

இதனால் கமல் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டினர். எனவே கமலை சந்தித்து அப்போது விளக்கம் அளித்தார் ராகவா லாரன்ஸ்.*

அதனால் தான் இப்போது கமல் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவே கூடாது என கருத்து தெரிவிக்கின்றனர்.

Rajinikanth diehard fan to act with Kamal haasan

கேட்ட கேள்வி புரியலையாம்..; ஆனாலும் பெரியார் விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

கேட்ட கேள்வி புரியலையாம்..; ஆனாலும் பெரியார் விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இதில் ஹீரோ எஸ்ஜே சூர்யா பெயர் ராமசாமி (என்ற) ராம்சே.

தற்போது இந்த பெயர் சர்ச்சையாகியுள்ளது.

ஒரு பிரபல செய்தியாளர் செல்வராகவனிடம் கேட்ட கேள்வியில்..

“நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ராமசாமி என்கிற பெயரை கொண்டவருக்கு எதிராகக் கடவுளை எதிர்கொள்ள வைத்துள்ளீர்கள்.?

அதற்கு செல்வராகவன் ஆமாம் என்கிறார்.

இதனால் பெரியாருக்கு எதிராக செல்வராகவன் செயல்பட்டதாக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தன்னுடைய அந்த வீடியோ பேட்டிக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என கூறியுள்ளார்.

Director Selvaraghavan’s latest statement about controversy in Nenjam Marapathillai

தொழில் அதிபருடன் திருமணமா? நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த கீர்த்தி சுரேஷ் அட்வைஸ்

தொழில் அதிபருடன் திருமணமா? நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த கீர்த்தி சுரேஷ் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு & ஹிந்தி ஆகிய மொழி படங்களில் திறமையாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார் கீர்த்தி.

தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் தொழில் அதிபருடன் கீர்த்திக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக தகவல்கள் பரவியது.

(நம் தளத்தில் அப்படி ஒரு பொய் செய்தி வெளியாகவில்லை)

இந்த வதந்தி குறித்து கீர்த்தி கூறியதாவது…

“எங்கிருந்து இது போன்ற தகவல் வெளியாகிறது. வெளியானது என தெரியாது.

இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. அந்த எண்ணமும் இல்ரை.

என் சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.” என கூறியுள்ளார் கீர்த்தி.

Keerthy suresh reacts on wedding rumours

புதுச்சேரியில் என்ஆர்.காங். – அதிமுக – பா.ஜ.க. தொகுதி பங்கீடு உறுதி.; யாருக்கு எத்தனை சீட்.?

புதுச்சேரியில் என்ஆர்.காங். – அதிமுக – பா.ஜ.க. தொகுதி பங்கீடு உறுதி.; யாருக்கு எத்தனை சீட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியே நடைமுறையில் உள்ளது.

எனவே ஆட்சியை கைப்பற்ற அங்கும் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

அதிமுக. & பாஜக.வுடன் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது.

தொகுதி பங்கீடு மற்றும் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட பல விவகாரத்தில் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்தது.

(அதாவது… ’முதல்வர் பதவி’ தருகிறோம் என்ற வாக்குறுதியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜ.க-வுக்கு அழைத்து வந்தனர்.)

தற்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு கூட்டணி உறுதியானது.

இந்த கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்ஆர் காங்., தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் ஆகியோர், பா.ஜ.,மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகிவிட்டது.

அதன்படி என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக-வுக்கு 14 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதியிலிருந்து அதிமுகவுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது.

இதில் 4-5 தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி தேர்தலை இந்த கூட்டணி சந்திக்கிறது.

NR Congress-BJP-AIADMK seal alliance for Pondicherry Elections 2021

நேற்று முன்தினம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்.. நேற்று திமுக ஆதரவு.. இன்று ஆதரவு வாபஸ்..; கன்ப்யூசனாகி கருணாஸ் காமெடி

நேற்று முன்தினம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்.. நேற்று திமுக ஆதரவு.. இன்று ஆதரவு வாபஸ்..; கன்ப்யூசனாகி கருணாஸ் காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேமுதல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

இதனிடையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

அதிமுக.,வை கடுமையாக விமர்சனம் செய்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

இவரை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்த தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் வெளியேறியது.

கருணாஸ் கூறியதாவது:-

“முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றார்.

இந்த நிலையில், “சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படைகட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.

இந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார்.

மேலும் திமுக., கூட்டணியில் தொகுதியை பெறுவதற்கும் முயற்சி செய்தனர்.

ஆனால், மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியதால் கருணாசை திமுக. கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று திமுக.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவித்தார்.

ஆனால் தமிமுன் அன்சாரி கூறுகையில்…

“தங்களுக்கு திமுக சீட் ஒதுக்காதது வருத்தம். கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

Politician Karunaas withdraws DMk support

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..; புதிய தொழில் நுட்பத்துடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரீ-ரிலீஸ்!

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..; புதிய தொழில் நுட்பத்துடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ulagam Suttrum Vaalibanஎம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன்.

ஆம்… தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.
இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார்.

அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர்.

நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர்.

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்’ உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி உண்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து
வெளியிடுகிறார்கள்.

MGR’s this film re release in this summer

More Articles
Follows