தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் புலவாமா பகுதி உள்ளது.
இங்கு 2,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.
இந்திய ராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரைக் கொண்டு மோதினர்.
இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் இந்தியா மற்றும் உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.
இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அகமது என்ற 23 வயது தீவிரவாதி நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கொடூரத் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…
காஷ்மீர் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பொறுத்தது போதும்…
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.’’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரஜினி.
Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attack