நிச்சயம் வருவார் காத்திருங்கள்… ரஜினி அரசியல் பற்றி சத்தியநாராயணராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று 12.12.2017 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

காலையில் கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்ற ரஜினிகாந்த், மாலையில் போயஸ் கார்டன் திரும்பினார். நேற்றைய தினம் ரசிகர்கள் அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சத்திய நாராயணராவ் கூறியதாவது..

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி அவரே அறிவிப்பார். அதற்கு இது சரியான சமயம் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அஜித்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யை நெருங்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர்.

எனவே இவர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் இவர்களது படங்களுக்கு அதிக ஒப்பீடு இருக்கும்.

மேலும் யுடிப் டீசர் மற்றும் டிரைலர் சாதனைகளை ஆகியவற்றையும் ஒப்பீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் ‘விவேகம்’ பட டீசரின் சாதனையை முறியடித்துள்ளது.

‘விவேகம்’ டீசர் 606,903 லைக்ஸ் பெற்று இருந்தது. இதை ‘தானா சேர்ந்த கூட்டம்‘ டீசர் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

முதல் இடத்தில் இருப்பவர் விஜய்தான். இவரது ‘மெர்சல்’ டீசர் 1 மில்லியன் லைக்ஸுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பிறந்தநாள் அன்று இரவு நேரத்தில் கமல் வாழ்த்தியது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் நேற்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா, தலைவா அரசியலுக்கு வா, என்றே பல வார்த்தைகள், டிசைன்கள் காணப்பட்டன.

இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல் நேற்று இரவு 9 மணிக்கு மேல் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

” Kamal Haasan‏Verified account @ikamalhaasan

சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்” என்று பதிவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் தளபதி விஜய்யின் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.

இவர் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் படம் இந்தியளவில் பிரபலமானது.

இப்படம் உலகளவில் ரூ.250 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் ஒரு காட்சியில் மருத்துவ துறையில் படைத்த சாதனைக்காக விருது பெற வெளிநாடு செல்வார்.

அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியில் தோன்றுவார்.

இந்நிலையில் இதே உடையை போல அவரது வேலாயுதம் புகைப்படம் சிபிஎஸ்இ 3வது வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை என்ற ஒரு பாடத்தில் இந்த போட்டோ இடம் பெற்றுள்ளது.

கமல் வழியில் மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்திய சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் 7ஆம் தேதி தன் பிறந்தநாள் விழாவில் மையம் விசில் என்ற மொபைல் ஆப்பை கமல் அறிமுகப்படுத்தினார்.

தற்போது நடிகர் சரத்குமாரும் மொபைல் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலிக்கு ஏஎஸ்கே என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த செயலியை செல்போனில் நீங்கள் டவுன்லோன் செய்தால், இதன் மூலம், சரத்குமாருடன் நேரடியாக கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி வெளியீட்டு விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார்,வரலட்சுமி, ராதிகா மகள் ரெய்னே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர்.

அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.

திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இதற்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யவேண்டும் என நினைத்த நடிகர் கஞ்சா கருப்பு, இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு ‘ஆட்டோ’ வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார். இனி மிச்சமாகும் அந்த வாடகைப்பணம் இன்னும் பலரின் பசியாற்ற உதவும் அல்லவா..?

கஞ்சா கருப்புவின் இந்த நல்ல மனசுக்கு ஏற்றபடி அவரது சினிமா கேரியரும் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

ஆம்.. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கிவரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணிக்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம்.. இந்தப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

இதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டகோழி-2’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20 நாட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.

மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு.

More Articles
Follows