தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் என்று சொன்னால் அது மிகையல்ல.
இவரது நடிப்பில் 168 வது படமாக ‘ஜெயிலர்’ என்ற படம் உருவாகி உள்ளது.
நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார்.
ஆகஸ்ட் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
ஜெயிலர் படத்திற்காக ரூ.130 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார்.
இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது.
வருமான வரி தினமான இன்று, வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது.
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு பதிலாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த விருதினை பெற்றுக் கொண்டார்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார்.
அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என ஆளுநர் தமிழிசை விழாவில் பேசினார்.
1990களிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்ச வரி செலுத்தும் நடிகர் நான்தான் என்று ஒரு முறை பேட்டி அளித்து இருந்தார் ரஜினிகாந்த். அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த வீடியோவை பதிவிட்டு அன்றும் இன்றும் ரஜினிகாந்த் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Rajinikanth awarded as highest tax payer of Tamilnadu