இமயமலைக்கு சென்று வந்தபின் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவைப் போல் ஆன்மிகத்திலும் அதிகம் நாட்டம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

எனவே தான் நடிக்கும் படங்கள் ஆனாலும், தான் தொடங்கும் எந்தவொரு முயற்சியானாலும் இமயமலைக்கு சென்று வந்தபின்னர்தான் முடிவு எடுப்பார்.

2.0 படத்தை முடித்துவிட்டு தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் உள்ள ஒரு மூத்த நடிகர் ஒருவர் அவருடைய கருத்தை தெரிவித்தபோது…
ஆன்மிக வழிகாட்டுதல் படி நடப்பவர் ரஜினிகாந்த். அவர் எதை செய்தாலும் அதற்கு முன்பு தன் குருநாதர் பாபாவிடம் ஆசி பெற்ற பின்னரே தொடங்குவார்.

எனவே அவர் இமயமலைக்குச் சென்று திரும்பிய பின், தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார்’’ என்றார்.

நிதின்சத்யா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ மற்றும் இதன் இரண்டாம் பாகத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அதில் நடித்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகாஜான் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai signed to play the hero in Actor Nitinsathyaas maiden production

பிக்பாஸ் 2… விஜய் டிவி வைத்த வலையில் சிக்குவாரா சூர்யா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது 100 நாட்கள் நடைபெற்ற நிலையில் இதன் வெற்றியாளராக நடிகர் ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை சூர்யா தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.

சினிமா நலனை பார்க்காமல் ரஜினி-கமல் அரசியல் பேசுகின்றனர் – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட கலந்துக் கொண்டனர். அவர்களின் பேசிய பேச்சில் அரசியல் இருந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையில் தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வருகிற 6 ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை ஐநாக்ஸ், பிவிஆர் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளதாவது….

சிவாஜி மணி மண்ட திறப்புவிழாவில் பங்கேற்ற கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் திரை உலக நலன் கருதி, 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வதற்கு துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்காமல் அரசியல் பேசியுள்ளனர்.

தமிழக அரசு இதுவரை வசூலித்து வந்த 30 சதவீத கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ள போதிலும் திரையரங்கு கட்டணம் குறையாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமமாக பகிர்ந்து வந்த நிலையில், அதில் 10 சதவீதத்தை 28 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்ந்து அரசுக்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் இரட்டை வரிவிதிப்பு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

டூப்ளிகேட் டாக்குமெண்ட் கொடுத்தார் தனுஷ்; திடீர் தந்தை கதிரேசன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி.

இவர்களுக்கு கலைச்செல்வன் என்ற ஒரு மகன் இருந்ததாக கூறியிருந்தனர்.

அவர்தான் இப்போது நடிகர் தனுஷ் ஆக இருக்கிறார் என மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர் .

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மதுரை கோர்ட்டில் நடிகர் தனுஷ் சார்பாக பிறப்பு, அடையாள ஆவணங்கள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டு, மேலூரில் தனுஷ்மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது .

இந்நிலையில், கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நடிகர் தனுஷ் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை போலியாக தயார் செய்து தாக்கல் செய்துள்ளார்.

எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை புதூர் காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார்.

மேலும், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் இந்த புகார் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

Kathiresan filed case against actor Dhanush regarding his son issue

வரலட்சுமியின் சக்திக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்-துல்கர்-ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பிரியதர்ஷினி.

இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

சக்தி என்று பெயரிடப்பட்ட இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால், தமிழ் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

மலையாள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை துல்கர் சல்மான் வெளியிட, தெலுங்கு போஸ்ட்ரை ராணா தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது இணையங்களில் வைரலாகி வருகிறது.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் வருகிற 15ம் தேதி தொடங்கவுள்ளதாம்.

Sivakarthikeyan Dulquer Rana released First look of Varalaxmis Sakthi

More Articles
Follows