தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்தை பாராட்டுபவர் யாராக இருந்தாலும் அவரை ஆன்மிகவாதி என குறிப்பிட தவறுவதில்லை.
எவருமே எதிர்பாராத வகையில் 2017 இறுதியில் “ஆன்மிக அரசியலை இந்த தமிழகம் விரைவில் பார்க்கும்” என தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.
அதன் பிறகு 2020 இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்தார் ரஜினி.
எனவே எப்போதும் போல ஆன்மிகத்தை மட்டுமே பின்பற்றி வருகிறார்.
அந்த வகையில் இனி ரஜினியையும், ஆன்மிகத்தையும் இனி எப்போதுமே பிரிக்க முடியாது.
மன அமைதிக்காக அடிக்கடி இமயமலை செல்வதும் இவரது வாடிக்கைகளில் ஒன்று.
அவ்வப்போது ஆன்மிக குருக்களை சந்தித்து ஆசிப்பெறுவதும் ரஜினியின் வழக்கம்.
இந்த நிலையில் ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்திருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படத்தை சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
Rajinikanth Aishwarya Soundarya met Gurudev Sri Sri Ravi Shankar
Renowned actor @rajinikanth, @soundaryaarajni, @ash_r_dhanush met Gurudev @SriSri Ravi Shankar.
With the one who has dedicated his life towards service to humanity , with his holiness @SriSri Gurudev … an evening to remember forever #divinity #spirituality #peace https://t.co/qF4eDr3TEO