தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார்.
மேலும் தேர்தல் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், நாசர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். விஷால் பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கார்த்தி பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன்,கருணாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.
இவர்கள் அணிக்கு ’சுமாமி சங்கரதாஸ் அணி’ என்று பெயரிட்டுள்ளனர்.
அவர் அணியில் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ்…
பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை.
ரஜினி, கமல் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே தேர்தலில் நிற்க முடிவு செய்தேன்.
நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார்.” என பாக்யராஜ் தெரிவித்தார்.
Rajini wishes Bhagyaraj and his Swamy Sangaradass team in Nadigar Sangam election