ஆறு மாதத்தில் தனிக்கட்சி அறிவிப்பு; ரஜினி அண்ணன் சத்யநாராயணராவ் உறுதி

ஆறு மாதத்தில் தனிக்கட்சி அறிவிப்பு; ரஜினி அண்ணன் சத்யநாராயணராவ் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini will announce his political party in mid of 2018 says his brother Sathyanarayana Raoஇந்த வருடத்தின் முதல் பாதியில் தன் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

அப்போது போர் வரும்போது பார்க்கலாம் என தன் அரசியல் வருகையை சூசகமாக தெரிவித்தார்.

தற்போது இன்னும் சில தினங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளார் ரஜினி.

இந்நிலையில் ரஜினி பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் நிருபர்களிடம் கூறியதாவது…

ரஜினிக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

அவர் சிறந்த ஆன்மிகவாதி. அரசியலுக்கு வந்தால், பல நன்மைகளை

அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ஆனால் அதற்குகெல்லாம் அவர் பயப்படமாட்டார்.

அவர் பாஜக.வுடன் கூட்டணி வைக்க மாட்டார். விரைவில், இன்னும் ஆறு மாதத்தில் (2018 ஜீன்) புதிய கட்சியை துவங்குவார்.” என்று கூறியுள்ளார்.

Rajini will announce his political party in mid of 2018 says his brother Sathyanarayana Rao

குழந்தைகளுக்கு பிடித்த 2 டைட்டில்கள்; ஒரே நாளில் மோதும் திலீப் சுப்பராயன்

குழந்தைகளுக்கு பிடித்த 2 டைட்டில்கள்; ஒரே நாளில் மோதும் திலீப் சுப்பராயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

balloon and sangu chakkaramகுழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருட்களில் மிக முக்கியமானவை பலூன்.

அதுபோல் தீபாவளி பட்டாசுகளில் பிடித்தவை சங்கு சக்கரம்.

தற்போது இந்த இரண்டு பெயர்களிலும் இரு படங்கள் உருவாகியுள்ளது.

இவையிரண்டும் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

பலூன் படத்தை சினிஷ் என்பவர் இயக்க ஜெய், அஞ்சலி, ஜனனிஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் தயாரித்துள்ளார்.

மாரிசன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கு சக்கரம் படத்தை சினிவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விசன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் திலீப்சுப்ராயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

யுவன் முத்தையா இயக்கும் ஈடிலி படம் பூஜையுடன் தொடக்கம்

யுவன் முத்தையா இயக்கும் ஈடிலி படம் பூஜையுடன் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eedili movie stillsலிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று & இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

திறமையான இளைஞர்களுக்கு விஜய் ஊக்கம் தருவார்… சிலிர்க்கும் சிபிராஜ்

திறமையான இளைஞர்களுக்கு விஜய் ஊக்கம் தருவார்… சிலிர்க்கும் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and sibiraj‘சத்யா’ படத்தின் வெற்றி நன்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிபிராஜ் பேசியதாவது…

” ‘சத்யா’ திரைப்படத்தில் என்னுடைய நடிப்பைக் கேலி செய்து நானே ஒரு வசனம் பேசியிருப்பேன்.

ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்னுடைய நடிப்பைப் பாராட்டினார்கள். ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

தெலுங்கில் ‘ஷணம்’ படத்தில் எழுதி நடித்த ஆத்விசேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ‘ஷணம்’ படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம்.

வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன்.

அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார்.

ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசையுள்ளது.

விஜய் அண்ணா பெரிய நடிகர். அவர் ‘சத்யா’ படம் பார்க்கவில்லை. ஆனால் படத்திற்கு வரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பார்த்து என்னை பாராட்டினார்.

அவர் எப்போதும் இளைஞர்களையும் திறமையானவர்களையும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை” என்று பேசினார் சிபிராஜ்.

ரியல் தீரன் போலீஸ் பெரியபாண்டியனுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி

ரியல் தீரன் போலீஸ் பெரியபாண்டியனுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi pays homage to periy apandiyanஅண்மையில் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியானது. இப்படத்தல் வட நாட்டுக் கொள்ளையர்களை பிடிக்க கார்த்தி அங்கு செல்வார்.

அங்கு இவரை கொல்ல நடக்கும் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் இதுபோன்ற நிஜ சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக போலீஸ் பெரியபாண்டியன் வடநாட்டு கொள்ளையர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பாதிப்பில் நடிகர் கார்த்தி அந்த வீரமரணமடைந்த அதிகாரிக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு….

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார்.

அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று “ பெரியபாண்டியன் “ அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கார்த்தி கூறியதாவது…

பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும்.

அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா ?? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது.

அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க , உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள்.

எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது “ என்றார்.

உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல் எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார்.

அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிறுக்கும் போது நெஞ்சம் பதை பதைத்துவிட்டது.

அவருடைய ஆன்மாவுக்கும், குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன் என்றார் கார்த்தி.

தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி; போருக்கு தயாரா.?

தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி; போருக்கு தயாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Super Star Rajinikanth going to meet his fans8 ஆண்டுகளுக்கு பிறகு தன் ரசிகர்களை கடந்த 2017 மே மாதம் சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இச்சந்திப்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

புகைப்படம் எடுத்துக் கொண்ட கடைசி நாள் நிகழ்வில் “போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். அதுவரை காத்திருங்கள்’ என தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார் ரஜினி.

இது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இருந்த்து.

இந்நிலையில் மீண்டும் இந்த டிசம்பர் மாத இறுதியில் சந்திக்கிறார். இது போருக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு இருக்குமா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

வருகிற டிசம்பர் 26ந்தேதி முதல் 31ந்தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த முறையும் சந்திப்பு நடைபெற உள்ளது.

ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கவிருக்கிறாராம்.

இதற்கான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை பெரு நகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளான வி.எம். சுதாகர், சிவராமகிருஷ்ணன் இருவரும் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Again Super Star Rajinikanth going to meet his fans

More Articles
Follows