தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை என்பதால் தியேட்டர்களும் மூடப்படும் சூழ்நிலை உள்ளது.
மேலும் இனி சூட்டிங்கும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இது தொடர்பாக சினிமா துறை சார்ந்த ஒவ்வொரு சங்கங்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க மீட்டிங்கில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா படங்களின் தியேட்டர் ரிலீசுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களின் படங்கள் தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இதனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.
எனவே இவர்களின் படங்களை 300 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
இதனால் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
Rajini Vijay Ajith Suriya movies box office collection get into trouble