தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
“கவிக்குயில்’ பட சூட்டிங்ல சமயத்துல ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி கிட்ட பேசிக்கிட்டே இருப்பேன். அப்போ சிவகுமார், எப்பப் பார்த்தாலும் பொன்னுங்க கிட்டயே பேசுறியே.. ஏதாவது புக்ஸ் படிக்கலாமில்லையான்னு திட்டுவாரு.
அதே மாதிரி ‘புவனா ஒரு கேள்விக்குறி’ பட ஷுட்டிங்ல சுமித்ராகிட்ட பேசிட்டிருப்பேன்.
அப்போ உதவி இயக்குனர் வந்து இரண்டு பக்கத்துக்கு வசனம் கொடுத்து, படிக்க சொன்னாரு.
நானும் மனப்பாடம் பண்ணிட்டிருந்தேன்.
ஆனா சிவகுமார் வந்து படத்துல அந்த டயலாக் சீன் இல்லை. நீ ரொம்ப நேரமா சுமித்ரா கூட பேசிட்டிருந்த, யாராச்சும் பார்த்தால் உன்னை பொம்பள பொறுக்கினு சொல்லிடக் கூடாது இல்லையா, அதான் இப்படி பண்ணேன் என்கிட்ட சொன்னாரு.
எனக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்னு என்னைப் பார்த்துக்கிட்டவரு சிவக்குமாரு,” என ரஜினிகாந்த் பேசினார்.
இதனைக் கேட்டதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.
Rajini talks about Sivakumar on Kaappaan audio launch