பாண்டே கிட்ட மாட்டிக்காதேன்னு சிவகுமாரு சொன்னாரு… – ரஜினி

பாண்டே கிட்ட மாட்டிக்காதேன்னு சிவகுமாரு சொன்னாரு… – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Ranraj Pandey achievements at Chanakya event பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் சாணக்யா என்ற யூடிப் சேனலின் முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பாண்டேவின் நண்பர் என்ற முறையில் கலந்துக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் பேசியதாவது….

தினமலர் பத்திரிக்கையில் இருந்து பின்னர் தந்தி டிவிக்கு வந்தார் ரங்கராஜ் பாண்டே.

அவர் நடத்தும் கேள்விக்கென்ன பதில் மற்றும் நடுவராக இருக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பேன். அவரின் ரசிகனாக மாறிவிட்டேன்.

சினிமா சூட்டிங் இருந்தால் கூட இவரின் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே சீக்கிரம் வந்துவிடுவேன்.

அவர் முன் எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இருந்தாலும் இவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது. விட்டால் போதும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.

ஒரு முறை என்னிடம் அண்ணே ஒரு பேட்டி கொடுங்க என்றார்.

நிச்சயம் முடியாது.. நான் மாட்ட மாட்டேன் என்றேன். சிவகுமார் கூட ரஜினி பாண்டே கிட்ட மாட்டிக்காத என்றார்.

பாண்டே தந்தி டிவியில் இருந்து வேலையை விட்டு வெளியேறும்போது ஏன் இப்படி செய்கிறார்? என நினைத்தேன்.

தந்தி டிவி நிர்வாகிகள் அவர்களின் ஊழியர்களை ஒரு பிள்ளையாக பார்த்துக் கொள்வார்கள்.

அங்கிருந்து வேறு சேனலுக்கு போக போகிறாரா? என்று கூட நினைத்தேன்.

அவரிடம் கேட்டதற்கு எல்லாரிடமும் பேட்டி கண்டு விட்டேன். இப்போது போரடிக்கிறது. அங்கு சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றார்.

அடுத்து சாணக்யா என்ற யூடிப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் அவரின் சாணக்கியத்தனம் தெரியுது.

துக்ளக் இதழ் போன்று சாணக்யா நன்றாக வளர வேண்டும். சோ போன்று ரங்கராஜ் பாண்டேவும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajini talks about Ranraj Pandey achievements at Chanakya event

சமூக அக்கறையில்லாத விஜய்..; சுதாரித்துக் கொண்ட சூர்யா

சமூக அக்கறையில்லாத விஜய்..; சுதாரித்துக் கொண்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay suriyaஉலகையே அச்சுறுத்தும் வைரசாக கொரானோ உருவெடுத்துள்ளது.

சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பெரியளவில் பரவி வருகிறது.

வட இந்தியாவிலும் கேரளாவிலும் நிறைய உயிர்களை கொரானா கொன்று குவித்து வருகிறது.

கை குலுக்க கூடாது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

இருமல் மூலம் அதிகளவில் பரவி வருவதாக விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகள் கேட்டுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தான் நேறு விஜய் நடித்த மாஸ்டர் பட இசை வெளியீடு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரசிகர்கள் அதிகளவில் அழைக்கப்படவில்லை என்றாலும் கிட்டதட்ட 1000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதை படக்குழுவினர் நினைத்திருந்தால் தவிர்த்து இருக்கலாம். ஆன்லைனில் பாடல்களை வெளியிட்டு இருக்கலாம். ஏற்கெனவே 3 பாடல்கள் இணையத்தில்தான் வெளியானது.

ஆனால் சமூக பொறுப்பில்லாமல் மாஸ்டர் படக்குழுவினர் நடந்துக் கொண்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் சூர்யா பொறுப்புடன் நடந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் என்ற படத்தை சூர்யா தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்களை நாளை மார்ச் 17ல் சத்யம் தியேட்டரில் வெளியிட இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து பாடல்கள் ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் & தியேட்டர்கள் & டாஸ்மாக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

பள்ளிகள் & தியேட்டர்கள் & டாஸ்மாக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN school studentsசீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுக்க 5000 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அண்மை மாநிலமான கேரளாவில் இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு லாரன்ஸ் பாராட்டு

அங்கு மார்ச் 31ஆம் தேதி வரை ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.

தற்போது தமிழகத்திலும் இந்த கொரோனா பீதி அதிகரித்துள்ளது.

மார்ச் 19 முதல் மார்ச் 31வரை சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் மாக், தியேட்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண, சுப காரியங்களில் நிறைய பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரணி, ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice – Run Away”

Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice – Run Away”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balajiஒரு பிரபல பொன்மொழி இருக்கிறது “நமது பெருங்கவலைகள் பலதும் நாம் அதிகமாக யோசிப்பதால் உண்டாவது” என்று. நமது தற்போதைய அச்சகரமான சூழ்நிலை இதை அப்பட்டமாய் நிரூபிக்கிறது. இணைய ரேடியோவில் Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice நிகழ்ச்சியில் (Run away) “தெறித்து ஓடு” எனும் தலைப்பில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பற்றி கலப்பாக பேசியிருக்கிறார்.

இந்த கொரோனா வைரஸை பற்றியே எல்லோரும் பேசி வரும் நிலையில் அச்சமும் சூழ்ந்து வர, அதனை விட பெரும் பகடியாய் வெறொன்று மாறியுள்ளது. எல் கே ஜி படத்தில் ஒரு காட்சியில் “ஓடு வைரஸே” என வைரஸ்க்கு எதிராக போராடும் காட்சி வரும். நாஸ்டடார்மஸ் முன்கணிப்பு போல் அது தற்போது உண்மையாகியுள்ளது. சில இளைஞர்கள் பட்டாளம் “ஓடு கொரோனா ஓடு” என ஓங்கி சத்தம் போட்டு போராடி வரும் காமெடி நிகழ்ந்துள்ளது.

இதனை அப்படியே தன் நிகழ்ச்சியில் இணைத்து கலாய்த்துள்ளார் RJ பாலாஜி. இதில் உச்சபட்ச கலாய்ப்பாக இந்த கூட்டத்தில் ஒருவர் கடுமையாக தும்மினால் என்னவாகும் என்று கேட்டது பெரும் நகைச்சுவையாக அமைந்தது. மேலும் அவர் ‘கடந்த ஞாயிறு இரவுக்காட்சி நானும் பஞ்சுமிட்டாயும் சத்யம் திரையரங்கில் தப்பாட் ( Tappaad) படத்திற்கு போயிருந்தோம். சத்யம் திரையரங்கின் அடையாளம் மசாலா பொடி தூவிய பாப்கார்ன்.

ஆனால் அது தூவும்போது ஒருவருக்கு தும்மல் ஏற்பட, அங்கிருந்தவர் அவருக்கு கொரோனா இருக்கிறது என கலாட்டா செய்து விட பெரும் பிரச்சனையாகவும், கலகலப்பானாதகவும் ஆகிவிட்டது. நாம் பயப்படும்படி சூழ்நிலை ஒன்றும் கடினமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்ததிகளை நம்பாமல் அதிகம் யோசிக்காமல் இருந்தாலே போதும்’ என்றார்.

நண்பர் அஜித் டிரெண்ட்.; தல ரசிகர்களையும் தன் வசப்படுத்திய தளபதி

நண்பர் அஜித் டிரெண்ட்.; தல ரசிகர்களையும் தன் வசப்படுத்திய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithநேற்று மார்ச் 15 மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் பேசும்போது… தன் நண்பர் அஜித்தை போல கோட் சூட் உடையணிந்து வந்ததாக குறிப்பிட்டு பேசினார்.

இதனையடுத்து ‘நண்பர் அஜித்’ என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் & அஜித் ரசிகர்கள் இந்த ஹேஷ்டாக்கில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

பெரும்பாலும் விஜய் & அஜித் ரசிகர்கள் இணையத்தில் சண்டை போடாத நாட்களே இல்லை.. அதுவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி அடித்து கொள்வர்.

ஆனால் நேற்று முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இது தொடர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆக…. நண்பர் அஜித் என்ற வார்த்தை மூலம் தல ரசிகர்களையும் தன் வசப்படுத்தி விட்டார் தளபதி.

சிம்பு-தனுஷ்-மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கணேஷ்.?

சிம்பு-தனுஷ்-மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கணேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhansuhஎல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்களை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார் ஐசரி கே கணேஷ்.

இந்நிறுவனம் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

இந்தக்கதையை தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவி செய்வதற்காக விஷால் மற்றும் கார்த்தி இருவரும் தேர்வு செய்து வைத்திருந்தனர்.

அந்த படத்திற்கு வெள்ள ராஜா கருப்பு ராஜா என்று பெயரிட்டு இருந்தனர்.

பிரபு தேவா இத்திரைப்படத்தினை இயக்குவதாக இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows