தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு நிருபர் 7 பேர் விவகாரத்தில் குடியரசு தலைவர் கடிதம் நிரகாரிக்கப்பட்டது குறித்து ஒருவர் கேட்டார்.
எந்த 7 பேர் பத்தி கேள்வி கேட்கிறீங்க? என்று ரஜினி அவரிடம் கேட்டார். உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு 7 பேர் விடுதலை குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியவில்லை என்று செய்திகளை வெளியிட்டனர்.
இது வைரலாக பரவியது. (நம் தளத்தில் இந்த செய்தி வெளியிடவில்லை)
தற்போது சற்றுமுன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அனைத்திற்கும் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது…
*ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை ஒரு சிலர் உருவாக்கி வருகின்றனர்.*
*7 பேர் குறித்து கேள்வி கேட்ட விதம் தெளிவாக இல்லை. செய்திகளை திரித்து வெளியிடாதீர்கள்.
*பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் பத்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியவன் நான்.*
*27 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.*
*பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். எதிர்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்பது என்னுடைய கருத்து.*
*அன்றாட நிகழ்வுகள் குறித்து இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன். முழுதாக அரசியலுக்கு வந்த பிறகே பதிலளிப்பேன்.*
*முன்னாள் முதல்வர் ஜெ மரணத்திற்கு பிறகு நடிகர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்ற அமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு, பிறர் மனம் புண்படாத வகையில் அமைச்சர்கள் பேசுவது நல்லது என்றார். இதே கேள்வியை நான் அமைச்சர்களிடம் பார்த்து கேட்டால் சரியாக இருக்குமா?
*பாஜகவுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.
Rajini talks about Rajiv Gandhi murder case and 7 Persons release issue