தமிழக அரசை தட்டி கொடுத்து கோரிக்கை வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா… இந்த பெயரை கேட்டால் உலகமே அதிரும் என்ற வகையில் இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்று நோயினால் உலகமே ஸ்தம்பித்துள்ள எனலாம்.

மார்ச் 31ஆம் தேதி சகஜ நிலைமைக்கு திரும்பாமல் வீட்டுக்குள்ளே மக்களை இருக்க இந்திய அரசு வற்புறுத்தியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரானா குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி மக்கள் நலனை காக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா குறித்து ரஜினி கூறியுள்ளதாவது… ‛‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்”.

என ரஜினி தெரிவித்துள்ளார்.

Rajini request to TN Govt regarding Corono virus issue

விஜய்-அஜித்-விக்ரம் ஏற்ற வேடத்தை முதன்முறையாக ஏற்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற ஒரு படம், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதனிடையில் கௌரவ தோற்றத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா.

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறாராம்.

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் பழங்குடியினரின் கோரிக்கைக்காக போராடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாராம்.

இதற்கு முன் தமிழன் படத்தில் விஜய், அந்நியன் படத்தில் விக்ரம், நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் ஆகியோர் வக்கீலாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya as advocate in new movie

தன் 2வது குழந்தைக்கு அழகான பெயர் வைத்த இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் பா. ரஞ்சித்.

தற்போது ஆர்யா நடிக்கும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்து பெரிய பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அக்குழந்தைக்கு மிளிரன் என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளனர்.

Ranjith and wife Anitha blessed with a baby boy named Miliran

தல அஜித் படத்திற்காக புல்லட் ஓட்டும் காலா ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

கொரோனா பீதி காரணமாக நாட்டில் உள்ள எல்லா பட சூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் வலிமை படமும் அடங்கும்.

இந்த படத்தில் அஜித்தின் நாயகியாக ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.

இவர் காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஹூமா குரேஷி, புல்லட் ஓட்டும் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்துடன் உங்கள் பயத்தை மீறுவதிலும் என் பதிவிட்டுள்ளார்.

Huma Qureshi to perform bike stunts in Valimai

ஆர்யாவுடன் ஜோடி போடும் ‘போதை ஏறி புத்தி மாறி’ நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, காலா படங்களை அடுத்து ரஞ்சித் இயக்கி வரும் படம் ‘சல்பேட்டா’.

ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் ஆர்யா பாக்ஸராக நடித்துள்ளார்.

இதற்காக இவர் தன் உடம்மை முறுக்கு கம்பி போல மாற்றியமைத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாம்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்திருந்தார்.

Dushara to star as female lead in Aryas Salpetta

விஜய்யை மட்டும் வாழ்த்தி அவரது ரசிகர்களை கிழித்த அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் விஜய்…. தனது நண்பர் அஜித் போல கோட் சூட் அணிந்து வரலாம் என நினைத்து வந்ததாக பேசினார்.

இதனால் விஜய் & அஜித் ரசிகர்கள் நட்பு பாராட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் பேச்சினை வரவேற்கும் விதமாக மதுரையில் அஜித் ரசிகர்கள் ‘தல-தளபதி’ தமிழ் சினிமாவின் மகுடங்கள் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் ஒரு ட்விஸ்டும் வைத்துள்ளனர்.

“தனது சக போட்டியாளரை நண்பராக மதிக்கும் மாண்பு விஜய் ரசிகர்களிடமும் இருந்தால் எத்தனை அழகாய் இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக… அஜித் ரசிகர்கள் விஜய்யை மட்டுமே ஆதரித்து அவரது ரசிகர்களை எதிரியாகவே நினைப்பது தெரிகிறது..

மேலும், ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவரவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்,

Ajith fans praises Vijay and slams Vijay fans

More Articles
Follows