கண்ணா 1 பத்தாது; 2 வேணும்.. காவலர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

கண்ணா 1 பத்தாது; 2 வேணும்.. காவலர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini request his fans to add 2 crore members in Rajini Makkal Mandramகடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

தற்போது 6 மாதங்கள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை கட்சி தொடங்கவில்லை.

ஆனால் அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவர் தீவிரமாக பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.

கடந்த ஜனவரி முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனால் ரஜினி தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாம்.

மேலும் உறுப்பினர் சேர்க்கைகளை அதிகரித்து இரண்டு கோடியாக உயர்த்திட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தலைவரின் கட்டளையை காவலர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் தானே

Rajini request his fans to add 2 crore members in Rajini Makkal Mandram

இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

இன்று 2 அதிரடி; அப்பா டிஆருக்கு காதல்; மகன் எஸ்டிஆருக்கு அரசியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Today 10th July T Rajendar and STR announced 2 movie titlesஇன்று ஜீலை 10ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தன் புதிய படத்தை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நமீதான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இன்றையக் காதல் டா என தலைப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல அவரே அந்த படத்தின் அனைத்தை வேலைகளையும் செய்கிறார்.

இப்படம் முழுக்க காதல் திரைப்படமாக உருவாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதே நாளில் அவரின் மகன் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு என்ற படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

இப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அப்பாவுக்கு இந்த வயதிலும் காதல் படம். மகனுக்கு இந்த வயதிலேயே அரசியல் படம்.. அசத்துங்க… மக்களே…

Today 10th July T Rajendar and STR announced 2 movie titles

திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tirupur subramaniamதமிழ் சினிமாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது.

அண்ணாமலை அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் அந்த சங்கத்தை நிர்வகித்து வந்தனர்.

புதிய நிர்வாகிகளை தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கு உடன்படாத சில விநியோகஸ்தர்கள் தனியாக பிரிந்து புதிய சங்கத்தை உருவாக்க நினைத்தனர்.

அதன்படி புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், துணை தலைவராக சரஸ்வதி முத்தனனும், பொதுச் செயலாளராக பன்னீர் செல்வமும், செயலாளராக சேலம் இளங்கோவும், கூடுதல் செயலாளராக ராம்நாட் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.

இவர்கள் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

வழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு

வழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajiniaknthசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த அனிமேஷன் படம் கோச்சடையான்.

இப்படத்தை ரஜினிகாந்த் குடும்பமே தயாரித்து இருந்தது.

இதை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.

இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ்ப்படம்2-வில் மீண்டும் இணைந்த மாதவன்-விஜய் சேதுபதி

தமிழ்ப்படம்2-வில் மீண்டும் இணைந்த மாதவன்-விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhavan and vijay sethupathiமிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’.

இவர்களுடன் திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். வருகிற வியாழக்கிழமை(ஜூலை 12) இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது.

தமிழ் சினிமாவையும் டாப் ஹீரோக்களையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்களாம்.

விக்ரம் வேதா படத்திற்கு பிறகு இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*

டி. ராஜேந்தருடன் நமீதா இணையும் *இன்றையக் காதல் டா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRடி.ராஜேந்தர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வீராசாமி’.

அவரே பாடல் எழுதி ஒளிப்பதிவு செய்து இசையமைத்து தயாரித்து இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ஆர்., கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.

லேடி டானாக நமிதா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் டி.ஆரும் நடிக்கிறார்.

வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்கிறார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

More Articles
Follows