தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.
தற்போது 6 மாதங்கள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை கட்சி தொடங்கவில்லை.
ஆனால் அரசியல் கட்சிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவர் தீவிரமாக பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
கட்சிக்கு வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.
கடந்த ஜனவரி முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனால் ரஜினி தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாம்.
மேலும் உறுப்பினர் சேர்க்கைகளை அதிகரித்து இரண்டு கோடியாக உயர்த்திட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தலைவரின் கட்டளையை காவலர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் தானே
Rajini request his fans to add 2 crore members in Rajini Makkal Mandram