தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனால் மக்கள் கடந்த ஒரு மாதமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் செல்லும் நிலை உள்ளது.
இதனால் தினக்கூலிகள், வணிகர்கள் முதல் பலரும் தங்கள் வருமானத்தை இழந்து உள்ளனர்.
இவர்களை போல பெப்சி உள்ளிட்ட சினிமா சார்ந்த தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு வசதியான நடிகர்கள், கலைஞர்கள் பலரும் உதவி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் வழங்கியிருந்தார்.
மேலும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என பல சங்கத்தினருக்கும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்.
நலிவடைந்த 750 தயாரிப்பாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை மே முதல் வாரத்தில் வழங்கவுள்ளார் ரஜினி.
இந்த தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் துணைத் தலைவர் கே. ராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Rajini plans to help 750 producers in Corona Crisis