தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்து வரும் 2.0 படத்தை மிகப்பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
லைக்கா நிறுவன தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைதான் இது.
இந்த வீடுகளை ஈழத்தமிழர்க்கு வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.
இவ்விழாவில் கலந்துக் கொண்டு அந்த மக்களுக்கு வீடுகளை வழங்கவிருக்கிறார் ரஜினி.
ஈழத் தமிழர்களுக்கான இநத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini participating in providing free house function at Srilanka