தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.
இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருந்தார் நெல்சன்.
‘டாக்டர்’ படத்தில் குழந்தை கடத்தலை மையப்படுத்தி இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்து அங்குள்ளவர்களை பிணைய கைதிகளாக வைப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ பட கதை இதுதான் என தகவல்கள் வந்துள்ளன.
அந்த கதைப்படி… “ஒரு சிறை கும்பல் கைதிகளுக்கும் ஒரு ஜெயிலருக்கும் நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.
ஒரு சிலைக் கடத்தல் கும்பலின் தலைவன் கைது செய்யப்படுகிறார். அவர் ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார்.
எனவே ஒரு கும்பல் தங்கள் தலைவனை வெளியே எடுக்க சதி திட்டம் போடுகின்றனர். அதனை எப்படி ‘ஜெயிலர்’ முறியடித்தார் என்பதுதான் படத்தின் கதை என தகவல்கள் வந்துள்ளன.
இதுபோல பல கதைகள் கசிந்துக் கொண்டிருந்தாலும் அடுத்த மாதம் ஆகஸ்டு 10 வரை காத்திருந்து ஜெயிலரை திரையில் ரசிப்போம்..
Rajini Mohanlals Jailer story line leaked