தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடுரோட்டில் கிடந்த ரூ. 50,000 பணத்தை தானே எடுத்துக் கொள்ளாமல் காவல் துறையிடம் ஒப்படைத்த சிறுவன் யாசின் பற்றி பார்த்தோம்.
அவனுடைய நல்ல உள்ளத்துக்கு பலரும் உதவி செய்ய காத்திருக்க, அவனோ எனக்கு உதவிகள் வேண்டாம். ரஜினி அங்கிளை பார்க்கனும் என்றான்.
இத்தகவலை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினிக்கு தகவலை தெரிவித்தனர்.
அதன்படி ஈரோட்டில் இருந்து தன் வீட்டுக்கு அந்த சிறுவனை வரவைத்து அவனை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டி அவனுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக வழங்கினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி…
“பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை எண்ணுடையது இல்லை எனப் திருப்பி தந்துள்ளான்.
இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவனைப் பெற்றவர்கள் இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
தற்போது சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன்.
யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன்.
இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் . காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.
Rajini met Yaasin who handed rupees 50 thousands to police from road