3வது முறையாக ரஜினி மக்கள் மன்றம் சின்னத்தில் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களின் 20 வருட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார் ரஜினிகாந்த்.

அதுமுதல் தன் கட்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அப்போது பாபா முத்திரையுடன் இருந்த தாமரைப் பூவை அகற்றினார்.

பாஜக.வுக்கும் ரஜினிக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் விமர்சிக்க அந்த தாமரைப் பூ அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாபா முத்திரையை சுற்றி உள்ள பாம்பு ராமாகிருஷ்ணா மடத்தின் லோகோவில் இருக்கும் பாம்பு போல் உள்ளது என்று தென்மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக உள்ளது என பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதனால் அந்த பாம்பு படமும் நீக்கப்பட்டு தற்போது ரஜினி மக்கள் மன்றம் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பாபா முத்திரை மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini Makkal Mandram logo changed 3rd time

அழையா விருந்தாளியாக சென்று ரசிகருக்கு அதிர்ச்சியளித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் தற்போது ‘மாரி-2’ படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நெல்லையில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி சென்று இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

மேலும் அந்த மணமக்களுக்கு தங்கச்சங்கிலியையும் பரிசாக கொடுத்தாராம்.

அங்கு திரண்ட ரசிகர்கள் தனுஷின் இந்த சர்ப்ரைஸ் விசிட்டால் தாங்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததாக தெரிவித்தனர்.

Dhanush attends his fans marriage and given surprise gift

புரோமோசன் பிச்சை எடுத்து நெகட்டிவ் விமர்சனமா?; கடுப்பில் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இப்போது வரும் சினிமாக்கள் ஒரு மாதத்தை தொடுவதே குதிரை கொம்பாக இருக்கிறது.

ஒரு பக்கம் திருட்டு விசிடி, புதிய படங்களை ரிலீஸ் செய்யும் வெப்சைட் இப்படி பல்வேறு அச்சுறுத்தலாலும் சில படங்கள் மொக்கையாக இருப்பதாலும் இந்த குறைவான நாட்களே ஒரு சினிமாவின் வாழ் நாளாக மாறிவிட்டது.

இந்நிலையில் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் படத்தை புரோமோட் செய்ய சில நபர்களை நியமித்து அவர்களுக்கு பணம் கொடுத்து புகழ்ந்து எழுத சொல்கின்றனர்.

சில நிறுவனங்கள் நன்றாக எழுத சொல்லிவிட்டு பின்பு படம் தோல்வியடைந்தால் அந்த நபர்களுக்கு கல்தா கொடுப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு நபர் கடந்த ஜனவரி மாதம் ஒரு படம் கூட சரியாக இல்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில் விக்னேஷ்சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் கடந்த ஜனவரி மாதம்தான் வெளியானது.

எனவே இந்த ட்விட்டரை குறிப்பிட்டு அசிங்கமாக திட்டியுள்ளார்.

நாங்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆபிஸ்க்கு வந்து புரோமோசன் கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் இப்படி நெகட்டிவ்வாக பேசுகிறார்கள்.

இந்த மாதிரி ஆளுங்கள பாத்தா வெரட்டி வெரட்டி வெளுக்க தோனுது என அந்தப் பட பாடல் வரியை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

உங்ககிட்ட காசு வாங்கினா மோசமான படத்தை நல்ல படம்னு சொல்லனுமா? என்று சிலர் சொல்லகின்றனர்.

வேறு சிலரோ, இந்த மாதிரி ஆளுங்கள வளர்த்துவிடுறதே நீங்கதானே என என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீங்க நல்ல படம் கொடுத்தா? அப்படி ஏன் சொல்றாங்க? என நடுத்தரமானவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Vignesh Shivan tweeted about Negative reviewers and Paid Promoters

Vignesh ShivN‏Verified account @VigneshShivN 11m11 minutes ago
Vignesh ShivN Retweeted Kaushik LM
Soltaaruu *****!
Such negative people r a curse to our industry! How much ever we work hard! they jus keep discouragin us wit such senseless tweets!
(They come to office n beg for money n then do this too!)
Ivanaa maadhiri negative aanaa aallungalaa Paathaalae Verattii****

சொன்னாங்க ஆனா செய்யல; பிக்பாஸ் கலைஞர்கள் பற்றி வையாபுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

தற்போதும் கூட அதன் ஹைலைட்ஸை அவர்கள் ஒளிபரப்பி வருவது வேறு கதை.

இந்த நிகழ்ச்சியில் ஆரவ், கஞ்சா கருப்பு, வையாபுரி, சிநேகன், நமீதா, ஓவியா, ஜீலி, பிந்தமாதவி, ரைசா, சக்தி, கணேஷ்வெங்கட்ராம், பரணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சுந்தர்.சியின் கலகலப்பு 2 படத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி.

இது தொடர்பான ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது… இந்த பிக்பாஸ் ஷோ முடிஞ்சி நாம வெளியே போன பிறகு எல்லாரும் சேர்ந்து போகாத ஊருக்கெல்லாம் போய் வரும் என்றார்கள்.

ஆனால் இதுவரை யாரும் செய்யவில்லை. அப்படியே போன் செய்தாலும் யாரும் போனை எடுப்பது இல்லை” என மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வையாபுரி.

விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது..? தந்தை எஸ்ஏசி. பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, கமல், விஷால் தங்கள் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்து விட்டனர்.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய்யின் அரசியல் குறித்து இது வரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அவர் நிச்சயம் வருவார் என்றே அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதாவது…

ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொடுத்து விட்டேன்.

ஆனால், அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் உள்ளது.” என கூறியுள்ளார்.

பார்த்திபன் மகள் கீர்த்தனாவை மணக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்திருந்தோம்.

தற்போது அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன.

பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.

தமிழில் சூப்பர் ஹிட்டான பீட்சா படத்தை அக்ஷய் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows