தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை – மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
1927-ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாகவும் அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனை முன்னிட்டு தமிழக அரசு நேப்பியர் பாலத்தை சதுரங்க கட்டம் போன்ற கருப்பு வெள்ளை நிறத்தில் மாற்றியுள்ளது.
மேலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தன் தந்தை நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்த விழாவிற்கு செல்வதாக ஐஸ்வர்யா அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
விழாவில் பல்கேற்ற கமல்ஹாசன்… “தமிழர்களின் பெருமையை எடுத்து கூறினார். கமல் பின்னணி குரல் கொடுக்க தமிழர்களின் பெருமைகளுக்கு ஏற்ப கலைஞர்கள் நடித்து காண்பித்தனர்.
இளம் வயதில் இசை சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம் இந்த துவக்க விழாவில் தன் கண்களை கட்டிக் கொண்டு பியானோவில் இசையமைத்தார்.
மேலும் ஒரே சமயத்தில் இரண்டு பியானோவில் தீம் மியூசிக்கை வாசித்து மெய்சிலிர்க்க வைத்தார்.
Rajini Kamal participated in 44th Chess Olympiad launch at Chennai