தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில மாதங்களாக கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் அரசியல் பேச்சை பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஜினி மற்றும் கமலை மறைமுகமாக தாக்கி பேசினார்.
“அரசியலுக்கு வர நினைப்பவர்கள் தொண்டு உள்ளத்தோடு வர வேண்டும். கலைத்துறையில் இருந்து வரும் எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என்றார்.
இது ரஜினி, கமலை முதல்வர் மறைமுகமாக தாக்கி பேசியதாக விழாவில் கிசுகிசுக்கப்பட்டது.
Rajini Kamal can not became like MGR says TN Chief Minister Edappadi Palanisamy