தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி.
இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க பிரபு,ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்டுகளை இந்த படம் படைத்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சந்திரமுகி படம் சாதனை புரிந்தது.
இந்த படம் வெளியாகி கிட்டதட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது” என்று தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் “சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில், ‘ஆப்த ரட்சகா’ என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்த படம், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.
தற்போது இந்த கதையை மேலும் மெருகேற்றி, ஒரு தமிழ் ஹீரோவிடமும் ஒரு பெரிய பட நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். விரைவில் ‘சந்திரமுகி-2’ சூட்டிங் ஆரம்பம்.” என பி. வாசு தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரஜினி இல்லாமல் சந்திரமுகி 2 உருவாவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியும் தற்போது புதிய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.