இந்திய சினிமாவின் ‘டான்’ ரஜினி.; ஒன் ஹவர் பேசினோம்.; சிலிர்க்கும் சிவகார்த்திகேயன் & சிபி

இந்திய சினிமாவின் ‘டான்’ ரஜினி.; ஒன் ஹவர் பேசினோம்.; சிலிர்க்கும் சிவகார்த்திகேயன் & சிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்து வசூலை குவிக்கும் டானாக உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் கடைசியாக ரிலீசான டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.

சில தினங்களுக்கு முன்… ‘டான் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்து பாராட்டியதாக ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் & இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார்.

இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து ட்விட்டரில் சிவகார்த்திகேயன் கூறியதாவது…

‛‛இந்திய சினிமாவின் ‛டான்’ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன்.

60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தலைவா” என மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிபியும் தன் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதில்…

ஒரு மகத்தான நாள்
Met Superstar @rajinikanth sir, blessed with a conversation for an hour about #DON,life & cinema.His presence was divine,his words were Wisdom & We were on cloud9 When he said
“What a film,What an emotion”
All we could say is “What a Man”
Love you Thalaiva https://t.co/FgnzkpXkPS

Rajini is a Don of Indian cinema says Sivakarthikeyan

ரஜினி விஜய் ரோல் மாடல்.; விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.. ‘தி லெஜண்ட்’ ஹீரோ பேட்டி

ரஜினி விஜய் ரோல் மாடல்.; விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.. ‘தி லெஜண்ட்’ ஹீரோ பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.

‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.

‘தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் ’மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்டனர்.

பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணனன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் நேற்று ஞாயிறு (மே 29) அன்று நடைபெற்றது.

இசை விழாவில் தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, யாசிகா, ஊர்வசி ரவுட்டேலா உள்ளிட்ட 9 முன்னணி நாயகிகள் பங்கேற்றனர்.

விழா முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார் லெஜண்ட் சரவணன்.

அப்போது… “ரஜினிகாந்த் & விஜய் என் ரோல் மாடல். தன்னை விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்”

தி லெஜண்ட் படம் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உருவாகி உள்ளதால், 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிடப்படவுள்ளது.

விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசியதாவது
.

“சினிமாவில் நடிப்பது லெஜண்ட் சரவணனுக்கு நீண்டகால விருப்பம். என்றார்.

நாசர் பேசும் போது.

“நடிகர்சங்க கட்டிடம் கட்டுவதற்கு 3 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் சரவணன் என்றும் அந்த பணம் 1000 குடும்பங்களின் பசியை போக்குவதாகவும் பாராட்டினார்

ஹாலிவுட் படத்திற்கு இணையான கதை என்பதால் இசையமைக்க ஒப்பு கொண்டதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் பேசினார்

Rajini and Vijay Role Model says Legend Saravanan

மரணமடைந்த ரசிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா.; ரசிகர்களுக்கு வேண்டுகோள்

மரணமடைந்த ரசிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா.; ரசிகர்களுக்கு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவருக்கு சினிமாவை தாண்டியும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் கல்விச் சேவை மனப்பான்மை.

சூர்யாவை தொடர்ந்து அவரது ரசிகர்களும் சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவ்வப்போது செய்து வருவகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலறிந்த நடிகர் சூர்யா சென்னையில் இருந்து கார் மூலம் நாமக்கல் சென்றுள்ளார்.

இதன்பின்னர் நாமக்கலில் உள்ள ஜெகதீஷின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

ஜெகதீஷின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த சூர்யா, பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஜெகதீசனின் மனைவி ராதிகாவிடம்..

குழந்தைகளுக்கான படிப்புச் செலவை ஏற்பதாகவும், குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் தயங்காமல் கேட்கும்படி சொன்னாராம்.

மேலும் வாகனங்களில் செல்லு போது பாதுகாப்பாக செல்லுமாறு தனது ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Surya to bear the study expenses of the children of the deceased fan;

கலைஞர் பெயரில் விருது & 10 லட்சம் பொன்முடிப்பு.; ஸ்டாலினுக்கு நாசர் – விஷால் நன்றி

கலைஞர் பெயரில் விருது & 10 லட்சம் பொன்முடிப்பு.; ஸ்டாலினுக்கு நாசர் – விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெறுநர் :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..

பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி…………

கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள்.

அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி…………….

கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

உண்மையுடனும், அன்புடனும்,

(ம.நாசர்)

பெறுநர்,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.
கடித எண். 65/தெ.ந.ச./2022 நாள் 30.05.2022

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம். நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், தமிழ் திரையுலகையும் பிரிக்க முடியாது. வரிவிலக்கு முதல் பையனூரில் வீடு கட்ட இடம் வரை திரைத்துறையினர் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார்.

தமிழ் திரையுலகை தாய் வீடாக நினைத்து வழி நடத்திய கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாள் அன்று தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும்”, ரூபாய் பத்து லட்சம் ரொக்கப்பணமும் மற்றும் நினைவுப்பரிசும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என்று அறிவித்தபோதே அகமகிழ்ந்தோம்.

அதற்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் தலைவராக மூத்த இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களையும், உறுப்பினர்களாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்களையும், மற்றொரு உறுப்பினராக நடிகரும், இயக்குனருமான திரு.கரு.பழனியப்பன் அவர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்,

(விஷால்)
பொதுச்செயலாளர்

Award in the name of the Kalaignar & 10 lakh gold .; Nasser – Vishal thanks Stalin

ரஜினி மோகன்லாலுடன் கமல் சந்திப்பு.; நீரே முக்கண் முதல்வர் என சீனுராமசாமி வாழ்த்து

ரஜினி மோகன்லாலுடன் கமல் சந்திப்பு.; நீரே முக்கண் முதல்வர் என சீனுராமசாமி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ல் வெளியாக உள்ளது.

எனவே படத்தின் புரோமோசனுக்காக கமல் உலகம் முழுவதும் சுற்றி திரிந்து அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்றார்.

அண்மையில் கேரளா சென்றபோது… மம்மூட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆசை என பேசி கேரள ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் கேரளத்தின் இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார் கமல்.

மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று அங்கும் பேசினார் கமல். இது மோகன்லால் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.

இந்த நிலையில் நேற்று மே 29ல் ரஜினிகாந்தை கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளார்.

அந்த படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த விக்ரம் பட புரோமோசன் குறித்து சீனுராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது…

“போரில் ஜான்சிராணி குழந்தையை தோளில் சுமந்தது போல படத்தை உலகமக்களிடம் ஒற்றை ஆளாக சேர்ப்பதிலும் நீரே முக்கண் முதல்வர்

முதல் 3 நாள் அரங்கம் நிறைதலே இங்கு வெற்றி.

பான் இந்தியா அல்ல
ஆல் இந்தியாவும் அல்ல
எம்.பி.ஏ படிப்பிற்கு வேல்டு இந்தியா நீர்தான்
வாழ்த்துகிறேன் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே https://t.co/ULeLbGxvjC

என பதிவிட்டு கமலை வாழ்த்தியுள்ளார்.

kamal mohan lal

Kamal meets Rajini Mohanlal; Seenuramasamy congratulates you as the Chief Minister

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

டி ராஜேந்தர் குணமடைய சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீங்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன வேடம் தான் என்றாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் கூல் சுரேஷ்.

சில படங்களில் ரவுடியாகவும், வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து இருப்பார் கூல் சுரேஷ்.

மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

எந்த படம் ரிலீஸ் இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விடுவார் கூல் சுரேஷ்.

அப்போதே எதையாவது பேசி அன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருப்பார்.

இவர் சிம்புவின் தீவிர ரசிகர் ஆவார். டி ராஜேந்தரின் விசுவாசியும் ஆவார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள டி ராஜேந்தர் விரைவில் நலம்பெற வேண்டும் என கடவுளை மனமுருகி நடிகர் கூல் சுரேஷ் வழிப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

சினிமாவில் சகலகலா வல்லவரும் இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சிம்பு வெளியிட்ட அறிக்கையில்…

அப்பாவுக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவர் சுயநினைவுடன் இருக்கிறார். உயர் சிகிச்சைக்காக அப்பாவை வெளிநாடு அழைத்து செல்ல இருக்கிறோம்” என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Did you see what Simbu fan cool Suresh did to heal D Rajender?

More Articles
Follows