தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆண்டவன் முடிவு செய்தால் தான் அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது.
இதனால் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்கள் ரஜினியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம்.
இந்நிலையில், கன்னடரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரகூடாது என தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் வீரலட்சுமி தலைமையில், இன்று மதியம் போயஸ் கார்டனிலுள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தனர்.
எனவே, ரஜினியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு திரண்ட தமிழர் முன்னேற்றப்படையினர் ரஜினியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் கையில் வைத்திருந்த 10 நாட்டு வெடிக்குண்டுகளை வீசினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Rajini house gets more police protection due to his Political entry speech