தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில மாதங்களுக்கு முன் தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.
அப்போது தன் ரசிகர்களை இனி தொண்டர்கள் என அழைக்கமாட்டேன். அவர்கள் காவலர்கள் என்றார்.
இதன் முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.
எனவே தன் அரசியல் கட்சிக்கு மாவட்ட தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, குமரி என சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கான மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகள் கூடும் ஆலோசனை கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களையும் தன் அறிவுரைகளையும் வீடியோ மூலம் அனுப்பி வந்தார்.
இதனிடையில் திடீரென ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கும் வந்தார்.
இந்நிலையில் தற்போது மாவட்டம் தோறும் சென்று நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான பயண திட்டம் விரைவில் மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rajini going to meet his TN fans district wise regarding Political event