தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழக முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு காரணமான எந்த அதிகாரிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் போராடிய மக்கள் பலரும் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு நடந்து சில தினங்களுக்கு பின்னர் தூத்துக்குடி மக்கள் சந்திக்க சென்றார் ரஜினிகாந்த்.
அப்போது சிகிச்சை பெற்று வந்த ஒருவரை சந்தித்த போது.. “ஒருவர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்டார். நான்தான் பா ரஜினிகாந்த் என்றார் ரஜினி.
எனவே ரஜினியை கிண்டல் அடித்தனர்.
மேலும் நான்தான்பா ரஜினிகாந்த் என்பதும் ட்விட்டரில் ட்ரெண்டானது.
(சில நாட்களுக்குப் பிறகு ரஜினியை கேள்வி கேட்டவர் ஒரு பைக் திருட்டு வழக்கில் கைதானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
அப்போது இந்த சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்..”போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர். எனவேதான் போராட்டம் கலவரமாக மாறியது. அடிக்கடி போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” என்றார்.
இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினிக்கு எதிராக திரும்பினர். போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகளா ?என ரஜினிக்கு எதிரான அறிக்கைகளை விட்டனர்.
அந்த சமயத்தில் நடிகர் உதயநிதி ரஜினியை கிண்டல் அடித்தார்.
ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் ரஜினி சொன்னது உண்மைதான்.. போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரமாக மாறியது” என விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதிக்கு மரணத்திற்கு எதிரான போராட்டம் உருவானது.
இந்த போராட்டமும் ஓரிரு தினங்களில் கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் சக்தி பள்ளியை அடித்து உடைத்தனர். பஸ்களை எரித்தனர். அங்கிருந்த மேஜை ,நாற்காலி ,ஃபேன் ,ஏசி உள்ளிட்ட பொருட்களை களவாடி சென்றனர்.
(தற்போது இது குறித்து ரஜினிகாந்த் வாய் திறக்கவில்லை.)
தற்போது திமுகவைச் சார்ந்த உறுப்பினர்களும் மற்ற அரசியல் பிரபலங்களும் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியதால் கலவரமாக மாறியது என்றனர்.
இதே போன்ற போராட்டம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ரஜினியை கிண்டல் அடித்த பிரபலங்கள் இன்று மட்டும் ரஜினி சொன்ன அதே வார்த்தையை சொல்வது ஏன்? என ரஜினி ரசிகர்களும் நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கள்ளக்குறிச்சிக்கு இதுவரை உதயநிதி எம்எல்ஏ நேரிலும் செல்லவில்லை.
இதனையடுத்து #உதவாக்கரை_உதய் & #நான்தான்டா_ரஜினி என்ற டிரெண்டுகள் ட்விட்டரில் வலம் வருகின்றன.
கூடுதல் தகவல்…
கிட்டத்தட்ட 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை கருணாநிதி ஆண்டபோது இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்.
அப்போது இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் கண்டன கூட்டங்களும் நடந்தன.
அப்போது நடிகர் சங்க சார்பிலும் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் பேசுகையில்.. “அப்பாவி மக்களை.. பெண்களை… குழந்தைகளை கொன்று குவித்த அரசு உருப்படாது. இறந்தவர்களின் ஆத்மாக்கள் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும்.. அவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.. அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது” என்று ரஜினிகாந்த் பேசினார்.
தற்போது 2022 இல் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் பசி பட்டினியினில் வாடி வருகின்றனர்.
பெரும் போராட்டங்களும் கலவரங்களும் நடந்து வருகின்றன.
இதனையடுத்து ரஜினி சாபம் பலித்தது.அன்றே சொன்ன ரஜினிகாந்த்.. என்று ரஜினி ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Rajini fans Vs Udhayanidhi fans clash on social medias.