களை கட்டும் கபாலி… இலவசங்களை கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்..!

களை கட்டும் கபாலி… இலவசங்களை கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Fans Ready to Celebrate Kabali Movieரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தை ஜூலை 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.

தயாரிப்பு தரப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக பணியாற்றி வந்தாலும், அவர்களை மிஞ்சும் வகையில் ரஜினி ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

முக்கியமாக சென்னை ரசிகர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கபாலி படம் பிரின்ட் செய்யப்பட்ட பனியன், டீ சர்ட், கையில் கட்டும் பேன்ட் வளையம் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சாதனை படைத்த நிலையில், கபாலி படமும் சரித்திரம் படைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இவர்கள்.

ரெமோ விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய முழுவிவரம்..!

ரெமோ விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய முழுவிவரம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Speech at RemoFirstLook Launchரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

“என் அசிஸ்டென்ட் பாக்யராஜ் ஒருவரிடம் ஒரு கதை இருக்கு கேள் என்றார் அட்லி. அது பெண் வேடம் என்றார்.

என்னெயெல்லாம் பையனாக பார்ப்பதே பெருசு. இதுல பெண் வேஷமா என மறுத்துவிட்டேன்.

மறுபடியும் அட்லி சொல்வே பாக்யராஜ் கண்ணனை அழைத்து கதை கேட்டேன்.

ஒரு க்யூட்டான காமெடி கதை. ஆனால் லேடி கெட்டப் என்பதால் பலமுறை யோசித்தேன்.

கிட்டதட்ட 10 மாதத்தில் 8 முறை கதை கேட்டேன். சார் நீங்கதான் இப்படத்தை செய்யனும் என்றார் பாக்யராஜ்.

ஒருவேளை பில்டப் கொடுக்கிறாரே? என கூட நினைத்தேன். இறுதியாக ஓகே சொல்லிவிட்டேன்.

இதுபோல கேரக்டருக்கு எருமையை விட பொறுமை அவசியமாக என முடிவு செய்தேன்.

மேக்கப் போடும் போது தலையில் மட்டும் 50 ஹேர்பின்கள் இருக்கும். எவனோ பின்னாடி இருந்து குத்துற போல இருக்கும்.

10 மாதம் எனக்காக வெயிட் செய்தார். எனவே பாக்யராஜிக்காக 1 வருடத்தை ஒதுக்கி கொடுத்தேன்.

பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவின் பிதாமகன். அவர் இந்த கதைக்குள் வந்தபின்தான் சின்ன ரொமோவாக இருந்த இப்படம் ஷங்கர் சார் படம் போன்ற பெரிய ரெமோவாக மாறிவிட்டது.

என் கண்களுக்கு கூட சிறிய லைட்டிங் வைத்தார். நானே என்னை பார்த்து சைட் அடித்து காதலித்தேன். “அட சே..நீதான்டா அது” என்று அடித்துக் கொண்டேன்.

நிறைய பெண் வேடங்களை போட்டு பார்த்தோம். கடைசியாக நிக்கி, ரேச்சல், அனு மேடம் மூவரும்தான் சரியான மேக்கப் போட்டு என்னை தயார் செய்தார்கள்.

 

Remo 1

 

பெண்கள் பாவம். எப்படிதான் THREADING, WAXING எல்லாம் பண்றாங்க தெரியல.

புருவத்துல ஒவ்வொரு முடியா புடுறாங்க. வலி தாங்கல.

செட்டுக்கு கூப்பிடும்போது வாம்மா.. வாம்மா கூப்பிடுவாங்க… யோவ் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க. சொல்வேன்.

ஸ்ரீராம் சார் முதல் ஷாட் வைச்ச பிறகுமான் என் ப்ரேமில் எனக்கே நம்பிக்கை வந்தது.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகி என்று சொன்ன உடனே நான்தான் முதல் ஆளாக வேண்டாம் என்று சொன்னேன்.

தொடர்ச்சியாக 2 படங்கள் இணைந்து செய்தால் கிசுகிசு வந்துவிடும். மேலும் அடுத்தடுத்து படங்கள் என்பதால் மறுத்தேன்.

நானே அவரிடம் நல்ல ஹீரோயின் இருந்தா சொல்லுங்கள் அப்படின்னு கேட்டேன். ஆனால் நிறைய பேர் மறுத்துவிட்டனர்.

இதில் நாயகியாக நடிக்க முடியாது என்று சொன்ன அந்த நாயகிகளுஙக்கு தேங்க்ஸ். ஏனென்றால் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அழகாக இருந்தது.

 

Remo 3

 

‘3’ படத்தின் போது அனிருத் எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கிறார். ஒரு நலம் விரும்பியாக, நண்பராக, சகோதரனாக இருக்கிறார்.

அவருடைய பணத்துக்கும் புகழுக்கும் அவர் இந்த படத்தை செய்யாமல் இருந்திருக்கலாம்.

நான் எப்போது கேட்டாலும், கதையே கேட்காமல் இசையமைக்க ஓகே சொல்லிடுவார்.

நானும் அந்த நம்பிக்கையில் அவரிடம் நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.

சினிமாவுக்கு நீ சின்சியராக இல்லேன்னா சினிமா உன்னை தூக்கி போட்டுடும் அப்படின்னு ஷங்கர் சார் சொல்லியிருக்கிறார்.

அந்த மந்திரத்தைதான் தயாரிப்பாளர் ராஜா பின்பற்றி வருகிறார்.

 

Remo 2

 

என் படத்தைப் நம்பி பார்க்க வரும் மக்கள், ரசிகர்களால்தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருக்கும் நீங்கள்தான் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

நான் ஒரு நடிகராக ஆகிவிட்டேனா என்பது இதுவரை தெரியாது. ஆனால் நடிகராக ஆவதற்கு முதல் அடியை இப்போ எடுத்து வைச்சிட்டேன்.

இதுவரை நான் எந்த இடத்திலும் சொன்னது இல்லை. இப்போது சொல்கிறேன்.

நான் கிட்டதட்ட 18 மணி நேரம் உழைத்துவிட்டு வருவேன். 5 மணிநேரம் மட்டும்தான் உறங்குவேன்.

அந்த நேரத்திலும் எந்தவித தொந்தரவு கொடுக்காமல் என்னை பார்த்துக் கொள்வார். என் மனைவி ஆர்த்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு பேசினார் சிவகார்த்திகேயன்.

‘ரெமோ’-வில் செகன்ட் ஹீரோயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

‘ரெமோ’-வில் செகன்ட் ஹீரோயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh at RemoFirstLook Launchசிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய ஒரு சிலர், கீர்த்தி சுரேஷ் படத்தின் இரண்டாவது நாயகி என்றனர்.

அதற்கு காரணம்… இதில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப் (பெண் வேடம்) இடுவதால், சிவா கீர்த்தியை விட அழகாக இருப்பதாகவும் எனவே சிவகார்த்திகேயன் தான் முதல் நாயகி என்றனர்.

இதனால்தான் கீர்த்தி சுரேஷை செகன்ட் ஹீரோயின் என்றார்களாம்.

ரஜினியை தொடர்ந்து கமல் பாடலை தலைப்பாக்கிய படக்குழு…!

ரஜினியை தொடர்ந்து கமல் பாடலை தலைப்பாக்கிய படக்குழு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ivan Yarendru Therikiratha Audio and Trailer to Releaseசூப்பர் ஹிட் அடித்த படங்களையோ அல்லது பாடல்களையோ புதுப்படத்திற்கு தலைப்பாக வைப்பது பேஷன் ஆகிவிட்டது.

ரஜினி படத்தலைப்புகள் மற்றும் பன்ச் டயலாக்குகளை தலைப்பாக வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன.

இவ்வழியில் தற்போது கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பாடலான விஸ்வரூபம் படத்தின் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ என்ற பாடலை தலைப்பாக்கியுள்ளனர்.

இதில் விஷ்ணு நாயகனாக நடிக்க வர்ஷா, இஷ்ரா நாயகிகளாக நடிக்கின்றனர்.

சுரேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Own Company சார்பாக அசோக்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நாளை மறுநாள் (ஜீன் 26ஆம் தேதி) வெளியாகிறது.

ஸ்ரீதேவி-அசின்-த்ரிஷா வரிசையில் மிர்துளா முரளி..!

ஸ்ரீதேவி-அசின்-த்ரிஷா வரிசையில் மிர்துளா முரளி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mrudula Murali to make her Hindi Debutதென்னிந்திய சினிமாவை தங்கள் நடிப்பால் கவர்ந்த ஸ்ரீதேவி, அசின் மற்றும் திரிஷா ஆகியோர் பாலிவுட்டுக்கும் சென்று கலக்கியிருந்தனர்.

தற்போது அவர்களின் வரிசையில் இணையவிருக்கிறார் கேரளத்து நடிகை மிர்துளா முரளி.

இவர் சூப்பர் ஹிட்டான ‘ஐயாள் நானல்ல’ மற்றும் ‘ஷிகாமணி’ ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

தற்போது திக்மான்ஷு துளியா இயக்கவுள்ள ‘ராஃக் தேஷ்’ படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஹிந்தி சினிமாவில் பலத்தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்ற ‘பான் சிங் டோமர்’ மற்றும் ‘சாஹேப், பீவி ஆர் கேங்ஸ்டர்’ படங்களை இயக்கியவர் திக்மான்ஷு என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பிரபல ஹிந்தி நடிகை சோனம் கபூரின் சகோதரர் மோஹித் மார்வா நாயகனாக நடிக்கிறார்.

இந்திய ராணுவ விசாரணையை மையமாக கொண்டு இப்படம் உருவாகவிருக்கிறது.

இப்படத்திற்கு தற்போது நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் ஆரம்பமாகிறது.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி-அனிருத் பற்றி ஷங்கர் ருசிகர தகவல்..!

சிவகார்த்திகேயன்-கீர்த்தி-அனிருத் பற்றி ஷங்கர் ருசிகர தகவல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar Speaks at RemoFL Launch Eventசிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி இணைந்து நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் பேசியதாவது…

“ரஜினிமுருகன் படம் பார்த்தேன். ஒரு மாஸ் ஹீரோவுக்கான அனைத்தையும் அதில் செய்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அவர் நினைத்திருந்தால் இன்னும் ஐந்து, பத்து வருடங்களுக்கு அதுபோன்ற கமர்ஷியல் படங்களை செய்திருக்கலாம்.

ஆனால் ரெமோ படம் மூலம் வேறு ஒரு கட்டத்திற்கு அவரை எடுத்துக் செல்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

அதில் நடித்த கீர்த்தி சுரேஷையும் பார்த்தேன். ரொம்ப க்யூட் அவர். அழகான நடிப்பு. சினிமாவுக்கே உள்ள முகவெட்டு அவரிடம் உள்ளது. நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இப்போது அனிருத்தை சந்தித்த போது, ‘என்ன சார் பிஸியா இருக்கீங்களா? எனக் கேட்டேன்.

இல்ல சார்.. படங்களை குறைச்சிட்டேன். நிறைய படங்களை கமிட் செய்துவிட்டால் ஒரு மெஷின் போல பாடல்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

என்ஜாய் பண்ண முடியல அப்படின்னு சொன்னார். நல்ல ஆரோக்கியமான முடிவு எடுத்திருக்கிறார் அனிருத். பாராட்டுக்கள்.”

இவ்வாறு ஷங்கர் பேசினார்.

More Articles
Follows