தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை. எனவே போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக கூறி சென்றார் ரஜினிகாந்த்.
இதனையடுத்து ரஜினியை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் தினம் தினம் வலம் வருகின்றன.
இந்நிலையில், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நடந்த தாமிரபரணி ஆறு பாதுகாப்பு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது… தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யாவிட்டால் அது சென்னை கூவம் ஆறு போல் ஆகிவிடும் என எச்சரித்தார்.
இதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியதாவது…
“எனது திருமணத்திற்கு முன்பே ரஜினி அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டது.
எனது பேரன் திருமணத்தின் போது கூட அவர் அரசியலுக்கு வரமாட்டார். அவர் தைரியமானவராக இருந்தால் உடனே வரவேண்டும்.
வருவேன், வருவேன் என மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர்.” என்றார்.
ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை ரஜினி வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்பேன்.’ என குறிப்பிட்டார்.
Rajini dont have courage so he wont enter politics says Anbumani Ramadoss