ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

ரஜினி கட்சியில் மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Partyஅரசியலுக்கு வருவது உறுதி, எம்ஜிஆரை போல நல்லாட்சியை கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்துவிட்டு தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

தனது ஆன்மிக பயணத்தை முடித்த பிறகு, அரசியல் கட்சி பெயரை அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் ரஜினிகாந்த் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான வேலைகளில் தற்போது சௌந்தர்யா ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம், ரஜினியின் அடுத்த அரசியல் வாரிசு தனுஷ் என அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறும்போது… குடும்ப அரசியலை விரும்பாதவர் தலைவர் ரஜினி. எனவே இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கின்றனர்.

ம்ம்ம்ம்ம்… பொறுத்திருந்து பார்ப்போம்…

Rajini daughter Soundarya may have major responsibility in Rajini Political Party

திருட்டுத்தனமாக படம் காட்டிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது

திருட்டுத்தனமாக படம் காட்டிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil rockersதமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவு செய்து திரையுலகத்திற்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்கள் தமிழ் ராக்கர்ஸ்.

ஒருபுறம் பலரும் இந்த இணையத்தை பலரும் திட்டினாலும் அதுவே இதற்கு விளம்பரபாக அமைய இது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

தென்னிந்திய சினிமாவின் ஆணி வேரையே ஆட்டம் காண வைத்தது.

இதனால் பெருமளவில் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் இதற்கு முடிவுகட்டும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழுவை உருவாக்கினார்கள்.

இதன் மூலம் தமிழ் ராக்கர்ஸ் குழுவினை விரைவில் கண்டறிவோம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார்.

அதன்படி தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 5 பேரை கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களைப் பதிவேற்றம் செய்துவந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 நபர்களை எஸ்பி பிரசாந்தன் தலைமையிலான கேரள பைரசி பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்தி, சுரேஷ் , பிரபு ஆகிய மூவரும் புலிமுருகன் படத்தை .IN, .AC, .NE ,.CO, .IS, .US, .RO உள்ளிட்ட 19 டொமைன்களிலிருந்து பதிவேற்றம் செய்துவந்திருப்பதும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான்சன், ஜெகன் டிவிடி ராக்கர்ஸ் என்ற பெயரில் பதிவேற்றம் செய்துவந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து எஸ்பி பிரசாந்தன், “புலிமுருகன் மற்றும் ராம் லீலா படக் குழுவினர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து கண்காணித்துவந்து அவர்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரங்களுக்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றிருப்பதால் இவர்களின் அக்கவுண்ட்களைத் தொடர்ந்து கண்காணித்து, போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் பயன்படுத்திவந்த லேப்டாப், ஹார்டு டிஸ்க், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த வருடம் தமிழ் ராக்கர்ஸ் அக்கவுண்டிற்கு ஒரு கோடியும், டிவிடி ராக்கர்ஸ் அக்கவுண்டிற்கு 75 லட்சமும் பணபரிமாற்றம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை பைரசி பிரிவு போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

ஆனால் மற்றொரு பெயரில் படத்தை வெளியிட்டு வந்துள்ளனர்.

பிரித்விராஜின் விமானம் படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக படக் குழுவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் அந்த தளத்தை கண்காணித்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெமினி-சாவித்ரியாக மாறிய துல்கர்-கீர்த்தி; இணையத்தை கலக்கும் போட்டோ

ஜெமினி-சாவித்ரியாக மாறிய துல்கர்-கீர்த்தி; இணையத்தை கலக்கும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samantha mahanatiதென்னிந்திய சினிமாவை தனது அழகான நடிப்பால் 1950 – 60-களில் கலக்கியவர் சாவித்ரி.

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரை ரசிகர்கள் நடிகையர் திலகம் என அழைப்பது உண்டு.

மிகவும் பிரபலமான பின்னர் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார் இந்த நடிகையர் திலகம்.

தற்போது அவரது வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் புதிய சினிமா படமாகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார்.

சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடித்து வருகின்றனர்.

சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.

முக்கிய கேரக்டரான பத்திரிகை நிருபராக சமந்தா நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என கூறியிருந்தார்.

சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்று கீர்த்தி இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினிகணேசனாக நடிக்கும் துல்கர்சல்மான் தோற்றமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த போட்டோ நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Dulquer and Keerthi role of Gemini and Savitri photos goes viral

mahanati

 

அரசியலில் ரஜினி-கமல்; யாருக்கு ஆதரவு? பிரபு பரபரப்பு பேட்டி

அரசியலில் ரஜினி-கமல்; யாருக்கு ஆதரவு? பிரபு பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will support Rajini and Kamal in politics says Prabuமக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சி பெயரை ஆரம்பித்துவிட்டு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சி பணிகளை கவனித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

தற்போது இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ரஜினி, விரைவில் கட்சி பெயரை அறிவித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என தெரிவித்துள்ளார் ரஜினி.

இந்நிலையில் கமல், ரஜினிக்கு நெருக்கமான நடிகர் பிரபு அவர்கள் இவர்களில் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்துள்ளார்.

வேலூரில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரபு கூறியதாவது…

என்னுடைய தந்தையை வாழ வைத்தது, வேலூர்தான். என் அப்பாவின் மீது வைத்துள்ள பாசத்தில் தான் இவ்வளவு ரசிகர்கள் என்னை பார்க்க வந்துள்ளனர். எல்லாருக்கும் நன்றி.

சினிமாவில் இருந்துதான் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசியலுக்கு வந்தனர். அவர்களை போல ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளனர். இதில் ஒன்றும் தவறில்லை.

இருவரும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமானவர்கள். 2 பேரும் அரசியலில் நல்ல முறையில் வர, அப்பாவையும் கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்.

தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு அழைத்தால் 2 பேருக்கும் ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன்.” இவ்வாறு பிரபு கூறினார்.

I will support Rajini and Kamal in politics says Prabu

பச்சோந்தி மூலம் இயக்குனராக அவதாரமெடுத்த நடிகர் சம்பத்

பச்சோந்தி மூலம் இயக்குனராக அவதாரமெடுத்த நடிகர் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sampathசமுத்திரக்கனி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த நெறஞ்ச மனசு படத்தின் மூலம் நடிகர் சம்பத் தனது சினிமா பயணத்தை தொடங்கினர்.

அதை தொடர்ந்து பருத்திவீரன் ,தாமிரபரணி, சென்னை 600028 ,சரோஜா,ஜில்லா போன்ற 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். .அதன் பிறகு சில வருடங்கள் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயம் அவர் பிற மொழி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார்.

.அதன் பிறகு இப்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து சக்க போடு போடு ராஜா மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள R K நகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்துவந்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.நடிகர் சம்பத் தற்போது பச்சோந்தி என்ற குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படம் சமூகத்தில் நடக்கும் ஆண் ஆதிக்கம் பற்றி கூறியுள்ளது.இந்த குறும்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பெண்மை பேசும் ஆண் ஆதிக்கம் என்றே கூறலாம்.

பெண்களை காட்சிப்பொருளாகவும் காமத்துக்கு கைக்குழந்தையாகவும் நினைக்கும் ஆண்களை பற்றி மிக சுருக்கமாக தெரிவித்துள்ளார் இக்குறும்படத்தின் இயக்குனர் சம்பத்.

 

அழகிய ஓவியத்தால் சிவகார்த்திகேயனை அழவைத்த ரசிகர்

அழகிய ஓவியத்தால் சிவகார்த்திகேயனை அழவைத்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan fan presented emotional art to his actorசின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது பெரும்பாலான மேடைகளில் தன் தந்தையை பற்றி சொல்வார்.

“நான் சம்பாதித்து என் தந்தைக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை. குறைந்தபட்சம் ஒரு புகைப்படம் கூட அவருடன் நான் சரியாக எடுத்ததில்லை.

இன்று அவர் உயிருடன் இல்லை” என்று விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் மைக்கில் பேசிய புகைப்படத்தை எடுத்து சிவகார்த்திகேயனின் தோளில் அவரது தந்தை கை போட்டபடி நிற்பது போல் ஓவியமாக வரைந்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதனை ரீட்வீட் செய்து ட்விட்டரில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது…

“எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம்கூட எடுக்கவில்லை. இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே…” என அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றியை தெரிவித்திருக்கிறார்.

2014 – Best entertainer award. The day u cried for this moment. couldn’t made this true on that day. But Tried to make ur tears into smile and Ur dream come true by this artwith lots of love for @Siva_Kartikeyan

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Sivakarthikeyan Retweeted Kirukals kiki
I don know how to thank u feeling very happy and emotional.. its been sad for me that i missed to take a good pic with appa..this one wil be very spl.. thanks again ma தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே…

Sivakarthikeyan fan presented emotional art to his actor

sivakarthikeyan dad art

More Articles
Follows