தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம். நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
Rajini condemns TN Govt is responsible for Tuticorin Sterlite protest