தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது இந்தியாவிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வரை 6 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது.
அது இத்தாலி நாட்டு மக்களை போன்று அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் இத்தாலி நாட்டை போன்று 3ஆம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.
மக்கள் நடமாடும் பகுதிகளில் 12 மணி முதல் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்” என ரஜினி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் சர்ச்சைகள் எழுந்தன.
ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை கண்டித்து SHAME ON TWITTER என டிரெண்ட்டிங் செய்தனர்.
இந்த நிலையில் இன்று மார்ச் 12ல் வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Rajini clarifies Why twitter removed his Janata Curfew video
அந்த விளக்கம் இதோ….
#IndiaFightsCoronavirus #StayAtHome #StaySafe pic.twitter.com/Jg2dgyuBh6
— Rajinikanth (@rajinikanth) March 22, 2020