ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார் சூப்பர்ஸ்டார்

ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார் சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini changed his fans associations as Rajini Makkal Mandramசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இருக்கும் மாஸ் நாம் அறிந்த ஒன்றுதான்.

அவரது ரசிகர்கள் பலரும் கடந்த 20 வருடங்களாக அவரை அரசியலுக்கு அழைத்துக் கொண்டே இருந்தனர்.

அதன்படி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவித்தார்.

அறிவிப்பு வந்த நாள் முதலே ரஜினி மன்றம் இணையதளம், கலைஞர் கருணாநிதி மற்றும் ஆர். எம் வீரப்பன் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் இன்று திடீரென ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றமாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற டைட்டிலை மாற்றியிருக்கிறார்.
அதனை மாற்றி ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது ரஜினியின் அரசியல் அதிரடியாக பார்க்கப்படுகிறது.

Rajini changed his fans associations as Rajini Makkal Mandram

ரஞ்சித்தின் இசை இணைவு : தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்

ரஞ்சித்தின் இசை இணைவு : தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala director Ranjith news The casteless collectivesஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது.

முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது,

“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி.

இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும்.

இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது.

அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.

கானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ராப் இசையும். அது கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது.

அதனடிப்படையில் பார்த்தால் ராப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி
அரங்கேற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பாடல்கள் பாடப்பட இருக்கிறது. எல்லா விதமான உணர்வுகளோடும் கூடிய பாடல்களாக அவை இருக்கும்.

இந்நிகழ்ச்சி, தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும். இன்னும் தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற எளிய மக்களின் அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” என்று பேசினார்.

மிகப்பெரிய திறந்தவெளி அரங்க இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் : சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம்
நேரம் : மாலை 6 மணி.

சூர்யா-சாய்பல்லவி கூட்டணியில் மற்றொரு பிரபல நாயகி

சூர்யா-சாய்பல்லவி கூட்டணியில் மற்றொரு பிரபல நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet Singhசூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ல் ரிலீஸாகிறது.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கத்துல் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

இதில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு நாயகியாக ஸ்பைடர், தீரன் பட புகழ் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

கமல்-விக்ரம் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

கமல்-விக்ரம் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and vikramசினிமாவுக்குக்காக தன்னையே வருத்தி நடிகர்களில் மிக மிக முக்கியமானவர்கள் கமல், விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்களாம்.

இப்படத்தில் விக்ரம் நடிக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை கமலின் உதவியாளரும் தூங்வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam ravi with his sonசக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ்திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது…

‘முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை.

இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். பிறகு நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் நம்பிக்கை வந்தது. எங்கள் நடிப்பை அது எளிதாக்கியது.

இதில் என் மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ம் நடிக்கலாம் என்றான். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான் அவனுடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவினரை கவர்ந்தது.

எப்போது ஒரு மணி நேரம் கூட ஒரு இடத்தில் உட்கார மாட்டான். ஆனால் எல்லோரும் நடிக்கும் காட்சியை மானிட்டரில் பார்த்துக் கொண்டே இருப்பான்.

ஒரு காட்சியில் நீங்கள் சரியா நடிக்கவில்லை. வசனம் மறந்து விட்டீர்கள் என்று கூறி இப்படி நடிங்க என்று எனக்கு கற்றுக் கொடுத்தான்’ என்றார்.

ஜெயம்ரவி மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்

ஜெயம்ரவி மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethurajஇமானின் இசையில் 100வது படமாக உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி உடன் அவரது மகன் ஆரவ் ரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் பேசியதாவது…

ஒரு வித்தியாசமான பட அனுபவத்தை இப்படம் தந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.

ஜெயம் ரவியின் மகன் இதில் நடித்துள்ளார். அவன் வளர்ந்து பெரிய நடிகராக வந்தபின் அவருக்கு பாட்டியாக நான் நடிப்பேன்.” என்றார்.

More Articles
Follows