தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசை அமைத்து வருகிறார்
இதில் ரஜினியுடடன் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்
இதன் படப்பிடிப்பு அண்மையில் பாண்டிச்சேரி கடலூர் பகுதிகளில் நடைபெற்றது. அப்போது சில வீடியோக்களும் வெளியாகி வைரலானது.
இதனிடையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பின் இடையிலும் கூட சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார் ரஜினி.
தேசிங்கு பெரியசாமி, பி.எஸ்.மித்ரன், சிபி சக்ரவர்த்தி, ‘ஜெய் பீம்’ புகழ் த.செ.ஞானவேல், எச். வினோத், அருண்ராஜா காமராஜா ஆகிய தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார்.
இவையில்லாமல் ‘பிம்பிசாரா’ பட தெலுங்கு இயக்குநர் மல்லிடி வாசிஷ்டா என்பவரிடமும் கதை கேட்டாராம் சூப்பர் ஸ்டார்.
இதில் ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த் என்பது கவனிக்கத்தக்கது
அண்மைக்காலமாக விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தெலுங்கு பட இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.