தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.
அதற்கு பிறகும் நீடிக்குமா? என்பது விரைவில் தெரிய வரும். ஒரு சில மாநில முதல்வர்கள் இந்த ஊரடங்கை நீடிக்குமாறு கேட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுபோல நடிகர்கள் விஜயகாந்த், கமல் ஆகியோர் தங்கள் இடங்களை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கமல் தன் அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள அறிக்கை அளித்திருந்தார்.
அதுபோல் விஜயகாந்த் தன் கட்சி ஆபீஸ் மற்றும் காலேஜ்ஜை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை நடிகர் ரஜினி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் சிகிசைக்காக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஏற்கனவே, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மக்கள் தங்குவதற்காக (துப்புரவு பணியாளர்கள்) அந்த மண்டபத்தில் இடம் அனுமதிக்கப்பட்டு உணவளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் சூளைமேடில் இருக்கும் தன் பொன்மணி மாளிகையை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Rajini and Vairamuthu offers their Marriage hall for Corona treatment