விசு மரணம்.: ரஜினிகாந்த் & டிபி. கஜேந்திரன் உருக்கமான இரங்கல்

விசு மரணம்.: ரஜினிகாந்த் & டிபி. கஜேந்திரன் உருக்கமான இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and TP Gajendiran mourn demise of Actor Visuதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் விசு.

இயக்கம் மட்டுமில்லாமல் நடிப்பு, வசனம், கதாசிரியர் என பன்முகம் காட்டியவர் இவர்.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவரைத் தொடர்ந்து இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்களும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியருப்பதாவது : ஒவ்வொரு மனிதனுக்கும் தாய், தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் இல்லை, வழியும் இல்லை. ஆனால் குருவை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஒரு குரு தன் சிஷ்யனை தேர்ந்தெடுப்பது, இன்னும் கொடுப்பினை. அந்த கொடுப்பினையை எனக்கு தந்தவர் என் குருநாதர் விசு. அவர் குருவாய் வந்ததால் நான் நிறைவாய் வாழ்ந்தேன்.

அவரின் மறைவுச் செய்தி என் தலையில் பேரிடியாக விழுந்தது. அவர் இந்த உலகில் இப்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. காரணம் அவர் வெறும் குருவாக எனக்கு பாடம் மட்டும் நடத்தவில்லை.

வாழ்க்கையை சொல்லிக் கொடுத்தார், சினிமாவை சொல்லிக் கொடுத்தார். எனக்கு எந்த பிரச்சினை என்றாலும் அவரிடம் சொல்வேன். அடுத்த நிமிடமே அதற்கு தீர்வு சொல்வார்.

சினிமா என்னை நிராகரித்து தள்ளியபோது அள்ளி அணைத்துக் கொண்டவர் அவர். பொள்ளாச்சி படப்பிடிப்பில் “நீங்களே படம் இயக்குகிறீர்களே உங்கள் உதவியாளர்கள் இயக்குனராக மாட்டார்களா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது சிறிதும் யோசிக்காமல் “இதோ என் உதவியாளர் கஜேந்திரன் அடுத்த படத்தை இயக்குவார்” என்று சொன்னதோடு, அடுத்த சில மாதங்களிலேயே வீடு மனைவி மக்கள் மூலம் என்னை இயக்குனராக்கி அழகு பார்த்தவர்.

அன்று அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நான் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவர் காட்டிய நெறிமுறையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். விசு ஒரு படைப்பாளி மட்டுமல்ல நல்ல வழிகாட்டி, தத்துவவாதி. உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களை மீண்டும் உருவாக்க அவர் இயக்கிய படங்களே போதும். அரட்டை அரங்கம் மூலம் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியவர். இளைஞர்களை தட்டி எழுப்பியவர்.

ஒவ்வொரு பொங்கல், தீபாவளிக்கும், அவர் இல்லம் சென்று அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்று வருவேன். அந்த பாக்கியம் இனி இல்லை என்பதுதான் என் நெஞ்சை பிளக்கும் வேதனை. படைப்புகள் வாழும் வரை படைப்பாளிகள் மரணிப்பதில்லை.

என் குருநாதர் தன் படைப்புகள் மூலம் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நம்புகிறேன். விண்ணுலகில் இறைவன் அவருக்கு சாந்தியையும், சமாதானத்தையும் தந்து அவரை இளைப்பாற வைக்கட்டும் என்று வேண்டுகிறேன்.

Rajini and TP Gajendiran mourn demise of Actor Visu

ஏஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய்யின் ஜோடி காஜல்..?

ஏஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய்யின் ஜோடி காஜல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Aggarwal will join with Vijay in Thuppakki 2கத்தி, துப்பாக்கி, சர்கார் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இது விஜய்யின் 65வது படமாக உருவாகவுள்ளது.

இது துப்பாக்கி 2 படமாக உருவாகலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்பட நாயகி யார்? என்பது குறித்த தகவல் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் தான் தளபதி 65 படத்தின் நாயகியாக இருக்கலாம் என நம்பலாம்.

Kajal Aggarwal will join with Vijay in Thuppakki 2

செம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை

செம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Jennifer talks about Nerrukku Ner flash backநேருக்கு நேர் படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

வசந்த் இயக்கிய இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க 1997 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த படத்தில் சூர்யா வேடத்தில் முதலில் அஜித் தான் நடித்திருந்தார்.

சில நாட்கள் அவர் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது.

அதன் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித்.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெனிஃபர்.

இவர்தான் சில ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ‘நேருக்கு நேர்’ படம் தொடர்பாக விஜய் அஜித் மற்றும் சூர்யாவுடன் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் ”வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. நான் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் நடித்தேன்.
அந்த படம் என் வாழ்வில் மிகச்சிறந்த நிகழ்வு.

ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் நடித்தார் அஜித். பின்னர் சூர்யா நடித்தார். அந்த காட்சிகளை மறுபடியும் படமாக்கினார்கள்.

இந்த படத்துக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றேன். மாநில அரசின் விருது உட்பட என தெரிவித்துள்ளார் ஜெனிஃபர்.

இப்போ சொல்லுங்க.. ஜெனி.. லக்கியான ஆளுதானே…

Actress Jennifer talks about Nerrukku Ner flash back

Vijay Ajith Suriya in Nerrukku Ner

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish varshan asmin“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் ஊடாக அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் சதீஸ் வர்சன் அஸ்மின் ஆகியோர் இப் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இவர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய “புறம்போக்கு” திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவரது புதல்வர்தான் உலகளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் .வர்சன் இப்பாடலுக்கு இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.

பாடல் வரிகளை தமிழ் சினிமாவில் “தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலினூடாக விஜய் ஆண்டனி மூலம் அறிமுகமான இலங்கை கவிஞர் , பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.

இலங்கையில் புகழ்பெற்ற கவிஞரான இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றவர். “விஸ்வாசம்” திரைப்படத்துக்கு இவர் எழுதிய (Tribute Song) ‘தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு” பாடல் கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.

அம்மா இரங்கல் பாடல்

விஸ்வாசம் தூக்குத்தொர பாடல்

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor basheer‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் ஒருபக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தன் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கியுள்ளார் பஷீர்.

“கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை அறிவுமதி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருக்கும் சஜித்துல்லா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான பின்னணிகளும் இடம்பெறுமாறு இரண்டே நாட்களில் அற்புதமாக படமாக்கியுள்ளார் பஷீர்.

இந்தப்பாடலில் பவர்ஸ்டார் உள்ளிட்ட 25 நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்குமே கொரோனா சோதனை செய்துவிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன்பின்னரே இந்த பாடலை படமாக்கியுள்ளார் பஷீர்.

இன்று மாலை வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு பாடலில் தமிழக அரசுக்கும் தன்னலம் பாராது மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஷீர்..

தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க… வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து ரஜினி விளக்கம்

தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க… வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் ஆக கொரோனா உருவெடுத்துள்ளது.

தற்போது இந்தியாவிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று வரை 6 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது.

அது இத்தாலி நாட்டு மக்களை போன்று அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் இத்தாலி நாட்டை போன்று 3ஆம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.

மக்கள் நடமாடும் பகுதிகளில் 12 மணி முதல் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்” என ரஜினி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் சர்ச்சைகள் எழுந்தன.

ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை கண்டித்து SHAME ON TWITTER என டிரெண்ட்டிங் செய்தனர்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12ல் வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video

அந்த விளக்கம் இதோ….

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video

More Articles
Follows