தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சினிமாவில் பிரபலமாக இருக்கும்போதே தேசிய முற்போக்கு திராவிட கட்சியை ஆரம்பித்து அதில் தீவிரம் காட்டி வருகிறார் விஜயகாந்த்.
அவரது 40 ஆண்டு கால கலைச்சேவை பாராட்டி அவருக்கு இன்று பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.
தே.மு.தி.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் 40-ம் ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியதாவது…
“கலைத்துறையில் கேப்டனுக்கு 40-வது ஆண்டுவிழா கொண்டாட வேண்டும் என்பது காஞ்சி மாவட்டச் செயலாளர் முருகேசனின் நீண்டநாள் ஆசை.
இப்போது வேண்டாம், பிறகு பார்க்கலாம் எனக் கேப்டன் சொன்னபோதும், எப்படியோ ஒருவழியாக அனுமதி பெற்று விழாவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகிறார்.
ஏப்ரல் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி, இரவு 8 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
11 மணிமுதல் மாலை 5 மணிவரை கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பிறகு விஜயகாந்த் பற்றிய வாழ்க்கை வரலாறு வீடியோ ஒளிபரப்பப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் பற்றி பேசுவார்கள்.” என்றார்.
விஜயகாந்தின் உழைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து பல்வேறு கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக ரஜினி மற்றும் கமல் இருவரும் பேசும்போது… சினிமாவில் விஜயகாந்த் எங்களுக்கு இளையவர். ஆனால் அரசியல் உலகில் எங்களுக்கு மூத்தவர் என்று குறிப்பிட்டு வாழ்த்தினர்.
Rajini and Kamal wishes for Vijayakanths 40th anniversary in Cine field