தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மரணம் அடைந்து 3 நாட்கள் ஆகியும் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் துக்கம் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழுது கொண்டே இருக்கிறாராம் இவரது மகள் ஜான்வி.
கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் கூடியுள்ளனர்.
போனிகபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் வீட்டில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தங்கியுள்ளார்.
இதனால் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் அங்கு சென்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் மும்பை சென்று ஓட்டலில் தங்கி உள்ளனர்.
அவர்கள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறியுள்னர்.
மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கமலின் முன்னாள் மனைவி சரிகா, மகள்கள் சுருதிஹாசன், அக்சரா ஆகியோரும் ஜான்விக்கு ஆறுதல் தெரிவித்தனர்.