தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…
இன்றைய சமுதாயம் ரொம்ப கெட்டுப்போடியிருக்கு,
தற்போதைய சூழலில் சோ போன்ற சிறந்த பத்திரிகையாளர் அவசியம் தேவை.
வாழ்க்கையில் கவலைகள் அன்றாடம் வரும். அதை நிரந்தரமாக்கி கொண்டால் அவன் நோயாகி. கவலைகளை தற்காலிகமாக்கி கொண்டால் அவன் அறிவாளி.
உண்மையான ஊடகங்களுக்கு சமுதாய பொறுப்பு வேண்டும். நிஜத்தை அப்படியே மக்களிடம் கொடுக்க வேண்டும்.
பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்.
பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என மீடியாக்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்தார்.
Rajini advice to media to give real news to public