தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட வேண்டுமென தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள்.
உலகத்தையே இப்போராட்டம் திரும்பி பார்க்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு இந்தாண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
ஆனால் போராட்டம் முடிவில் ஏற்பட்ட வன்முறையால் இந்த வெற்றியை யாரும் இதுவரை கொண்டாடவில்லை.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் பெரிதும் பங்கு கொண்டவர் நடிகர் லாரன்ஸ், வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7.15 வரை மெழுகுவர்த்தியோ அல்லது, செல்போன் லைட்டோ, வேறு ஏதேனும் டார்ச்சோ வைத்து நம் மகிழ்ச்சியை வழிப்படும் வகையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதை தன் ட்விட்டரில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.
Raghava Lawrence @offl_Lawrence
மாணவர்கள் இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சல்லிகட்டை கொண்டாடுவோம்! Feb 18 ஆம் நாள் அன்று மாலை 7 – 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும்.