தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், நடிகைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வழக்கம் ரசிகர்களுக்கு எப்போதும் இருந்து வருகிறது.
இதனால் பல ரசிகர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, நடிகர்கள் வசிக்கும் பகுதிகளில் பல மணி நேரங்கள் காத்திருப்பார்கள்.
ஒரு சில நடிகர்கள் முன்வந்து படம் எடுப்பார்கள். சிலர் தவிர்த்து விடுவார்கள்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இனி ரசிகர்கள் என்னை காண நேரில் வர வேண்டாம்.
நானே உங்கள் இடத்திற்கு வருகிறேன். அப்போது போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஒரு ரசிகர் ஊரில் இருந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
எனவேதான் இவர் நேரில் வருகிறேன் என அறிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி சேலம் செல்கிறார்.
இனி அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லவிருக்கிறாராம்.
Raghava Lawrence @offl_Lawrence 1h1 hour ago
Hi dear Friends and Fans..! I’m coming for you to Salem on 7th
Raghava Lawrence going to meet his fans to take photos